எளிய பாட்டி வைத்தியம்:-

எளிய பாட்டி வைத்தியம்:-

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12. சீதபேதி மலைவாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20. வரட்டு இருமலுக்கு எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

SAYINGS









MARVIN GAYE


PARENTING


NATARAJAN


NDT கல்வி



பொறியியல் துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரும் NDT கல்வி


நம் நாட்டில் தற்பொழுது வேலைகளின் தேவை என்பது அதிகரித்துக்கொண்டே உள்ளது,படித்து முடித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே இனி என்ன செய்வது என்று அறியாமல் இருக்கும் மாணவருக்கு இக்கட்டுரை ஒரு வழிகாட்டியாக இருக்கும்.


NDT (Non Destructive Testing) எனப்படும் பரிசோதனை சார்ந்த இப்படிப்பில் மொத்தம் மூன்று நிலைகள் உள்ளன, இதில் முதல் இரண்டு நிலைகளை முடித்தாலே வேலை வாய்ப்பிற்கு போதுமானதாகும்.


இப்படிப்பில் மொத்தம் இருபத்திரண்டு பிரிவுகள் உள்ளன. அவற்றில் பதினொன்று பிரிவுகள் முக்கியத்துவம் கொண்டவை, அதிலும் தற்பொழுது இருக்கும் பெரும்பாலான தொழில்நிலையங்களில் நான்கு பிரிவுகளைத்தான் அதிகம் உபயோகப்படுத்துகின்றனர், அவை முறையே :UT-Ultrasonic Testing, MT-Magnetic Testing, RT-Radiographic Testing மற்றும் PT-Penetrant Testing ஆகும்.




D.M.E, B.E/B.Tech இயந்திரவியல் (Mechanical) மற்றும் அறிவியல் பட்டதாரிகள் இப்படிப்பை படிக்க தகுதியானவர்கள் ஆவர். இப்படிப்பின் மூலம் வேலைவாய்ப்பு தரும் துறைகள்: Oil & Natural Gas, Power Plant, Ship Building, Automobiles, Aeronautical மற்றும் Steel Plants ஆகும்.




வேலைவாய்ப்பு என்பது இந்திய மற்றும் வெளிநாடுகளில் சிறப்பாக உள்ளது, குறிப்பாக வளைகுடா நாடுகள் எனப்படும் துபாய், சவுதி அரேபியா,குவைத்,பஹ்ரைன்,மற்றும் ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இப்படிப்பு முடித்தவர்களின் தேவை அதிகமாக உள்ளது. NDT முடித்தவர்கள் தொழிற்சாலையில் தரக்கட்டுப்பாடு பிரிவில் தரம் உயர்த்து பொறியாளர் (Quality Engineer) அல்லது தரம் உயர்த்து நிபுணர் (Quality Professional) ஆக இருக்கின்றனர்.




தரக்கட்டுப்பாடு துறை என்பது Quality Assurance (QA) மற்றும் Quality Control (QC) என இரு பிரிவாக உள்ளது. இதில் Quality Assurance (QA) என்பது Corporate Level எனப்படுவது. இதில், Quality Policy பின்பற்றுவது, நிறுவனத்தின் நடைமுறை எப்படி இருக்கவேண்டும் என்று ஆய்வு செய்வது, ISO பின்பற்றுவது முதலியவை அடங்கும். தரக்கட்டுப்பாட்டுத் துறையில் வேலைகள் மொத்தம் மூன்று உட்பிரிவுகள் உள்ளன Receiving Inspection, Process Inspection, மற்றும் Final Inspection ஆகும். இந்த மூன்று துறைகளிலுமே இப்படிப்பை முடித்து வேலை செய்யலாம்.




இத்துறையில் பணிபுரிபவற்கு நல்ல ஊதியம் வெளிநாட்டில் கிடைப்பதால் இது ஒரு சிறந்த துறையாகவே கருதப்படுகிறது. இதில் இரண்டு அல்லது மூன்று ஆண்டு அனுபவத்திற்கு பின்னர் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.




இந்த பயிற்சி நிறுவனத்தில் Non Destructive Testing (NDT) Certified By (ASNT-American Society of Non Destructive Testing), QA, QC, Welding Inspector Certified By (American Welding Society) மற்றும் (British-CSWIP), Nebosh-(Safety Course), Nace-(Painting Inspector), 6sigma போன்ற பயிற்சிகள் தரப்படுகின்றன. மற்றும் Diploma in Quality Engineering என்ற ஒரு வருட பட்டயப் படிப்பும் உள்ளது.




Institutes




SRI DURGHA LAKSHMI INC, (SDLINC)




20A, மூப்பனார் நகர்,




ஐந்தாவது தெரு,




சென்னை – 21




(குறிப்பு: தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகில்)




தொலைபேசி எண் : 9600162099,




மின்அஞ்சல் : sdlincndt@gmail.com






ஒரு தந்தையின் கடிதம்:



ஒரு தந்தையின் கடிதம்:


ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!


தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும். அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.




இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

ஏழு



நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்:




1) ஏழ்மையிலும் நேர்மை

2) கோபத்திலும் பொறுமை

3) தோல்வியிலும் விடாமுயற்சி

4) வறுமையிலும் உதவிசெய்யும்

... மனம்

5) துன்பத்திலும் துணிவு

6) செலவத்தி;லும் எளிமை

7) பதவியிலும் பணிவு




வழிகாட்டும் ஏழு விஷயங்கள்:




1) சிந்தித்து பேசவேண்டும்

2) உண்மையே பேசவேண்டும்

3) அன்பாக பேசவேண்டும்.

4) மெதுவாக பேசவேண்டும்

5) சமயம் அறிந்து பேசவேண்டும்

6) இனிமையாக பேசவேண்டும்

7) பேசாதிருக்க பழக வேண்டும்




நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்:




1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்

2) பரிசுத்தமாக

சிரிக்ககற்று கொள்ளுங்கள்

3) பிறருக்கு உதவுங்கள்

4) யாரையும் வெறுக்காதீர்கள்

5) சுறுசுறுப்பாக இருங்கள்

6) தினமும் உற்சாகமாக

வரரவேற்கத்தயாராகுங்கள்

7) மகிழ்ச்சியாக இருக்க

முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்




கவனிக்க ஏழு விஷயங்கள்:




1) கவனி உன் வார்த்தைகளை

2) கவனி உன் செயல்களை

3) கவனி உன் எண்ணங்களை

4) கவனி உன் நடத்தையை

5) கவனி உன் இதயத்தை

6) கவனி உன் முதுகை

7) கவனி உன் வாழ்க்கையை




# வாழ்தல் இனிது, வாழ்வை நேசி...

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!
கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!
மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…


நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????


(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)