முட்டாள்தனமாக

உங்கள் எதிரிகளை குழப்பமடைய வைக்கவேண்டுமா?
அவர்களுக்கு முன்னாள் முட்டாள்தனமாக முடிவெடுங்கள்

ஒழுக்கம் மாறும்!

ஒழுக்கம் என்பதன் அளவுகோல் அதை விமர்சிப்பவரின் ஒழுக்கத்தின் அளவிற்கேற்ப மாறும்!

சவ ஊர்வலங்களில்!

எவ்வளவு அழகான மலர்களையும் ரசிக்க முடிவதில்லை
- சவ ஊர்வலங்களில்!

தோற்றவன்

விரும்பி கேட்டாலும் வெற்றி பெற்றவன் எதையும் விளக்குவதில்லை.
தோற்றவனின் விளக்கங்களை யாரும் விரும்புவதில்லை

பிடித்த எல்லாம்

உனக்கு பிடித்த எல்லாம் எனக்கு பிடிக்க வேண்டுமென்று எதுவுமில்லை...
உன்னை பிடித்திருப்பதே போதும் எனக்கு!

திரும்பி திரும்பி

விடைபெற்று வரும்போது திரும்பி திரும்பிப் பார்க்கிறேன் நீ விரும்பிப் பார்த்துக் கொண்டேயிருப்பாய் என்பதறிந்து...!

போடா டேய்

போடா டேய்... என சிரித்தபடி சொன்னால் எதிராய் அர்த்தம் கொண்டு என்னருகில் வரும் உன் பிழை பிடித்தே இருக்கிறது

ஓடி வந்த வாசுகி

அழைத்த குரலுக்கு ஓடி வந்த வாசுகியை புகழ்கிறார்கள் உன் அழைப்பால் அலைபேசி அடிக்கும் போது நான் ஓடி வந்து எடுக்கும் வேகம் அறியாதவர்கள்

தூக்கம்

 தூக்கம் என்பது குட்டி மரணம் தானே ?
பின் ஏன் தூங்க ஆசைப்படுகிறார்கள் ,
மரணத்தை கண்டால் பயப்படுகிறார்கள்

நீ! எனதுயிர்

மூச்சுத்திணறி தவித்த போது கிடைத்த சுவாசம்... நீ! எனதுயிர்!!

புத்திசாலிகள்

புத்திசாலிகள் காதல் கவிதைகளை எழுதுவதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்..
காதலிக்க முயல்வதில்லை

ரகசியம்

என் மகளை பொறுத்தவரை ரகசியம் என்பது காதருகில் சொல்லப்படும் ஒரு விஷயம் அவ்வளவுதான்..அதை யாரிடமும் நாம் சொல்லலாம்..

கடவுள் உண்டா

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது
# அவைகளுக்கு கடவுள் உண்டா என சந்தேகம் வருவதில்லை”

இலவசம் எதிர்ப்பு கழகம்

சத்தம் போட்டு சிரிக்காதே ! யாரேனும் இலவசமாய் சங்கீதம் கேட்டுவிடப் போகிறார்கள்!
# இலவசம் எதிர்ப்பு கழகம்

'பேட்கேர்ள்'

'குட்கேர்ள்' என்று செல்லமாக கூறி என் கன்னம் கிள்ளினாய்.... தினமும் அதையே கூறச்சொல்லி அடம் பிடிக்கும் 'பேட்கேர்ள்' ஆனேன் நான்! #மீள்

என் பெயருடன் உன் பெயர்

என் பெயருடன் உன் பெயர் எழுதி விட்டு...
முதல்பாதி படிக்கிறேன், இரண்டாம் பாதியை ரசிக்கிறேன்.

பெண்ணுரிமை

பெண்ணுரிமை பற்றியெல்லாம் ஏதேதோ சிந்திக்கிறேன்.....
உன்னுரிமை நான் என எண்ணிச் சிரிக்கிறேன்.

கன்சல்டன்சி

நம் கையில் உள்ள வாட்சை பார்த்து,
நமக்கே மணி சொல்வதற்கு பெயர்தான் கன்சல்டன்சி !

கூட்டுக்குடும்பம் !

வளர்ந்து வரும் நாகரீக காலகட்டத்தில் கணவனும், மனைவியும் சேர்ந்திருப்பதற்கு பெயர் தான் கூட்டுக்குடும்பம் !

காதலிக்க காதலி

காதலிக்க தெரிந்தவனுக்கு காதலி கிடைப்பதில்லை !
காதலி கிடைத்தவனுக்கு காதலிக்க தெரிவதில்லை !

"அம்மா"

பிறக்கும் குழந்தைக்கு பெயர் தேடினாள் கர்ப்பிணி பெண்...குழந்தையோ பிறந்த அடுத்த நொடி சரியாக "அம்மா" என்றழைத்தது விரல்பிடித்து.

தமிழ்

யார் பிழையாக எழுதினாலும் தமிழ் கோபித்துக் கொள்ளாது..
#அதனால் தான் அவள் அன்னை.”

சிவந்ததென் கன்னம்

மருதாணியால் சிவந்த கரம் பற்றி நீ நுகர்ந்த தருணம்...
மருதாணியேதும் இல்லாமல் சிலிர்த்து சிவந்ததென் கன்னம்!

#பட்டாசு

தொழிலாளரும் ,விற்பனையாளரும் ,வாடிக்கையாளரும் பாராபட்சமின்றி பாதிக்கபடுகிறார்கள்
#பட்டாசு

கசிந்த கண்ணீர்

கன்னம் வருடி கொடுக்கிறது உன் நினைவில் கசிந்த கண்ணீர்...

உடைந்த மனம்

எலும்புகள் போல மீண்டும் சேர்வதில்லை உடைந்த மனம்...

கடல் கடக்கும் பறவை

கடல் கடக்கும் பறவையின் சிரமம் உணர்கிறேன் உன் நினைவுகள் வரும் இரவை கடக்கையில்..

தகுதி

கண்களுக்கு தகுதி தெரிவதில்லை..
தேவையற்ற சொற்களுக்கும் கூட கலங்குகிறது...

பாவம்!

பலூன் ஒன்றைத் தண்ணீரில் அமுக்கிக் கொன்றுவிட்டேன்.
பாவம்! செத்து மிதந்துகொண்டிருக்கிறது!

என்னை பிடிக்கும்

உனக்கு என்னை பிடிக்கும் என்றறிந்ததிலிருந்தே அதிகம் பிடிக்கிறது என்னை.

வெளிச்சம்

விடிந்து விடுவதால் மட்டுமே வெளிச்சம் வந்துவிடாது....

ரசிக்கிறது மனது

பிடிக்காத சில விசயங்களை கூட ரசிக்கிறது மனது ,
அதை பார்க்கும் போது உன் நினைவை கிளறுவதால்.

புடவையில் பெண்

சுடி இனிது, மிடி இனிது என்பர் புடவையில் பெண்ணை காணாதவர் :)

தாகூர்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்
- தாகூர்

பார்

விழுந்த இடத்தை பார்க்காதே!
வழுக்கிய இடம் பார்!

உண்மை அன்பு

எனக்காக மாறி விடு என்ற நிபந்தனையின் போதே மாறி விடுகிறது உண்மை அன்பு!

சட்டைகள்

நீயற்ற பொழுதுகளில் மெத்தை முழுதும் இறைந்து கிடக்கின்றன உன் சட்டைகள்...

ஒரு காதல்

ஒவ்வொருவருக்கும் ஒரு காதல் இருக்கும்!
சில சமயம் தெரியாமலேயே இறக்கும்!

மைல்கற்

மரத்தினடியில் மைல்கற்களாக மாறி நிற்கின்றன
- சில காதல்கள்

பத்தினி

பாரதத்தாய் இன்னும் பத்தினிதான் ,
வறுமைகோட்டை இனியும் தாண்டாமல் இருப்பதால் !

காணவில்லை

சற்று இளைப்பாற சிலைக்கு வெளியே போய்வந்த கடவுள் வியப்பானார்,
சிலையை காணவில்லை !

கண்ணீரோடு

வழியனுப்ப வந்த மனைவி கண்ணீரோடு கணவனிடம் சொன்னாள்
"பணம் அனுப்ப மறந்திடாதிங்க" !

பூசாரி

கடவுளுக்கும் கடைசி ஆசை ஒன்று உண்டு !
அடுத்த பிறவியிலாவது அனைத்தையும் அனுபவிக்கும் பூசாரியாக பிறக்க ஆசை !

பணம்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

ஆசை

உன் வீட்டு தொலைகட்சியாய் மாற ஆசைபடுகிறேன் ஏனெனில் கண் இமைக்காமல் என்னையே நீ பார்ப்பாய் என்ற ஏக்கத்தில்
-(உங்கள் விருப்பம்)

பேச விடாதே

நண்பா உன்னவளை அதிகம் பேச விடாதே விளைவு நீ அதிகம் பேச ஆரம்பித்து விடுவாய் - தனியாக

விஸ்கி

பெண்ணை நேசித்தவன் ஒருநாள் என்னையும் நேசித்து தான் தீர வேண்டும்
-விஸ்கியின் வீர வசனம்

புன்னகை செய்

எதிர் பார்ப்பு இல்லாமால் புன்னகை செய்பவர்களே இவ்வுலகின் மிக அழகானவர்கள்

பட்டுச்சேலை

நூறு பட்டுச்சேலை தொட்டுப் பார்த்துவிட்ட திருப்தியுடன் நூல் சேலை வாங்கிச் செல்கிறாள் ஏழைப்பெண்!

பாதிக்கிணறு

பாதிக்கிணறு தாண்டிய பின் தான் நினைவுக்கு வருகிறது..
ஆமா நாம எதுக்கு கிணறத் தாண்டனும்..?

”உண்ணாவிரதம்!

தரையிலிருந்த ”பட்டினி”,
மேடையேறினால் ”உண்ணாவிரதம்!

அடிமை

"அடிமை இல்லை என்பார்.
பொண்டாட்டி கழுத்தில் மட்டும் தாலி!

அரசின் இலவசங்கள்!

கொடுத்ததெல்லாம் இங்கிருந்தே கொடுக்கப் பட்டது, எடுத்ததெல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது!

அரசின் இலவசங்கள்!

தேசிய வியாதி

குற்றம் சொல்லுதல் தேசிய வியாதி ஆகிவிட்டது. குற்றம் செய்தல் தேசிய தொழிலாகிவிட்டதால்!

பழைய மாதிரி

பழைய மாதிரியே இருக்கணும்னுனா புகைப்படமாவோ நினைவுகளவோ தான் இருக்க முடியும்

'எதிரிகள்'

நம் மனவலிமை எவ்வளவு என அறிய மிகவும் உதவி புரிபவர்கள் 'எதிரிகள்' என்றழைக்கபடுகின்றனர்

வாழ்க்கை

வாழ்க்கை எளிமையாய் தான் இருக்கிறது ஆனால் எளிதாக இல்லை!!

கத்தி

கடைத்தெருவில் கத்தியை காட்டி பணம் கேட்டான் ஒருவன் !
நானும் கொடுத்திவிட்டு வாங்கிவந்தேன் கத்தி வியாபாரியிடமிருந்து!

கண்டுபிடி

தேடுவதை நிறுத்து, கண்டுபிடி

அரசியல்

கற்றது கையளவு களவாண்டது கடலளவு

வீரனாக

பொறுமையாக இருப்பதை நீங்கள் பயந்தாங்கோளித்தனம் என்று எண்ணினால் ,நான் உங்கள் மொழியில் வீரனாக இருக்க விரும்பவில்லை.