விதைகள்
ஒரு புதிய முயற்சி !
ஜென்
உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நீ பிறருக்குத் கொடுக்க முடியும்!
- ஜென்
கண்ணீரின் துளிகள்
சூரியனே ...இன்று கொஞ்ச நேரம் நீ வராதே ..... ஏன் என்றல் அவள் கண்ணீரின் துளிகள் சிறிது நேரம் என் கல்லறையின் மீது இருக்கட்டும்
நம் பெயர்
நம் பெயர் நமக்கு பிடிக்க.... நமக்குப் பிடித்தவர் அதை உச்சரிக்க வேண்டியுள்ளது
பெண் போதை
நிச்சயம் பெண் போதைதான், அதை உணர ஆணாக இருக்க வேண்டும்.
குழந்தையா
நான் உன்னால் அழும்பொழுதெல்லாம் குழந்தையாகவே மாறிப்போகிறாய் என்னை சிரிக்கவைக்க!
உடல்
இறந்த உடலைப் பார்த்து இறக்கப் போகும் உடல் அழுகிறது மரணவீட்டில்
அன்பு
வடிந்து விடும் அழகுக்கும் காமத்துக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்றும் வாழும் அன்புக்கும் காதலுக்கும் இல்லை
நல்லவன்
பெண்ணை கடத்தி சென்று கற்பழிப்பவன் காதல் என்று ஆசை காட்டி சீரழித்தவனை விட நல்லவன்..
விருப்பம்
கனவுகளிலேயே தங்கி விட விருப்பம் நீ வந்து செல்வதால்...
வெள்ளை
வெள்ளை நிறம் தான் அழகென்று தமிழரின் மனதில் அழுந்தப் பதித்தது யாராக இருக்கும்?
இன்று
நீயில்லாமல் தான் வாழ்ந்தேன் நேற்றுவரை ஆனாலும் நீயில்லாத நாளையை எதிர்கொள்ளும் துணிவில்லை இன்று...
பிரிந்திருக்க முடியுமா?
பிரிந்திருக்க முடியுமா? என்கிறாய். நிரந்தரமாக பிரியவே விரும்புகிறேன்.... இந்தக் கேள்வியை விட்டு!
கவிதை
எதோ கிறுக்கி விட்டு உன்னிடம் 'எப்படி இருக்கிறது கவிதை' என்கிறேன்.. ஒரு புன்னகை செய்கிறாய்! இனி இதற்கொன்று எழுதியாக வேண்டும் நான்.
வென்று விடுகிறாய்
நம் சண்டைகளில் எனக்காக தோற்றுப்போய்.... என்னை வென்று விடுகிறாய்.
சாப்பிட்டியா
உண்டவுடன் நிறையாத வயிறு.... 'சாப்பிட்டியா?' என்ற உன் குறுஞ்செய்தி கண்டவுடன் நிறைகிறது..!
வெளிப்படுத்து
அனைவருக்கும் ஏதேனுமொரு வலி இருக்கத்தான் செய்கிறது..யதார்த்தவாதிகள் அதை சோகத்திலும், அறிவாளிகள் சிரிப்பிலும் வெளிப்படுத்துகிறார்கள்
குழந்தை
தாய்மொழியை கற்றுக் கொள்வதற்குமுன்..குழந்தை அதன் மொழியை தாய்க்கு கற்றுக் கொடுக்கிறது !
பாதம்
ஒரு அதிசயம்! பூவின் கீழே எப்படி மென்மையான அரும்புகள்??? #அவள் பாதம்
பெண்
ஒரு பெண்ணை பெண் என்ற நினைப்போடு பார்த்தாலே கவர்ச்சி தொற்றிக் கொள்ளும் ஆணின் மனதில்!
வா
எதற்க்காக என்னை பிடித்திருக்கிறது என்கிறாய்...அதை தெரிந்து கொள்ளதானே காதலிக்கலாம் வா என்கிறேன் !!
குஷி
பெண்ணை குஷிப்படுத்த அவள் அழகாய் இருப்பதை சொல், ஆணை குஷிப்படுத்த அழகான பெண் அவனை ரசிப்பதாக சொல்.
டாய்ய்ய்
வெட்கம் "மட்டுமே" அணியும்போது நீ கொள்ளையழகு என்றேன்..சற்றே யோசித்தப்பின் டாய்ய்ய் என்கிறாய் !!!
கனவு
நேற்றிரவு என்ன கனவு கண்டாய்? என்றேன்..அதற்க்குள் மறந்துவிட்டாயா? என்கிறாய் !!
ஆயுதயெழுத்து
உயிரெழுத்து நீ !!
மெய்யழுத்து நான் !!
ஆயுதயெழுத்து காமம் !!
அருவி
ஆக்ரோசமான அருவியொன்றை ஓவியத்திற்குள் அடைத்துவிடும் முயற்சியை போன்றதுதான்..உனக்கான காதல் கவிதைகள் !!
அவள் கருவிழி
அவள் கருவிழி அசைவினில் என் இதயமும் நகர்கிறது இட வலமென..!
புருவம்
ஒரே வண்ணத்தில் இரண்டு வானவில்கள்..அவள் புருவம்!!
நோய்
பணம் மட்டுமே போதும் என்கிறது ஆரோக்கியம்: மனிதர்களும் வேண்டும் என்றுணர்த்துகிறது நோய்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)