கொலுசொலிகளால்

உன் மெளனத்தை கொலுசொலிகளால் மொழிப்பெயர்த்துவிட்டு நீ சென்றுவிடுவாய்,அது இரவையும் பகலாக நீட்சித்துவிட்ட நாட்களை எண்ணி நகைக்கிறேன் இப்போது!

சந்திப்பு

வீட்டு முகவரியை மட்டும் என் டைரியில் விட்டுவிட்டு உன் காதலை உன்னுடனே எடுத்துசென்ற இறுதிநாட்களை ஞாபகப்படுத்திவிட்டது நம் எதிர்பாரா சந்திப்பு!

மெளனங்களைக்

பேசாத நாட்களில் மெளனங்களைக் கொண்டு புன்னகையை தூவிச்சென்றோம்,இன்று பேசிய போது புன்னகையை விடுத்து விரக்திக்குள் மூழ்கிப்போனோம்

மதிப்பை

ம்பிக்கை உடைய - ஒன்றின் பின்னால் வரும் பூஜ்யங்களே மதிப்பை நிர்ணயிக்கின்றன.

ஊட்டி

ஒற்றைக்கல்மண்டபம்->ஒத்தக்கல்மண்டபம்->ஒத்தகமண்டபம்->->உதகமண்டலம்->ottakmand->உதகை->oottagai->ஊட்டி வந்தாச்சு எறங்குங்க..

உயிர்

உள் சுவாசித்த காற்றை வெளியிட்டு உயிர் வாழ்கிறேன் , உயிர் சுவாசித்த நினைவுகளை உள் வைத்து தினம் வீழ்கிறேன் !

களவு

கடவுள் நம்பிக்கை அதிகமாகிறது சன்னிதிக்கு வெளியே கழற்றி விடப்பட்ட காலணிகள் களவு போகாத பொழுது!

கண்ணீர்த்துளிகள்

சிதறி விழும் உன் நினைவுகளை அணைக்க முயன்ற எனக்கு தினந்தோறும் பரிசாகக் கிடைக்கின்றன சில கண்ணீர்த்துளிகள்....

பக்கம் பக்கமாய்

பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறேன் உன்னை பற்றி இப்பொழுதுதான் புரிகிறது அந்த பக்கங்களெல்லாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று!

பொய்

பாராட்டுக்களில் மட்டுமே பொய்யும் கூட ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

விரும்புகிறது

ஒத்த ரசனை உடையவரைக் காட்டிலும்,"எனக்கென ஒரு தனி ரசனை உண்டு" என ஒத்துக்கொள்பவரையே மனம் அதிகம் விரும்புகிறது..

நகம்

விரல் பற்றி நகம் கடித்து சீர்படுத்தி விடுகிறேன் என் கண்ணம் கிள்ளுகையில் உன் நகம் நோகாதிருக்க!

நுழைத்து

உனது கையுறையில் கை நுழைத்து காலணியில் கால் நுழைத்து உன் ஆடைக்குள் உடல் நுழைத்து இறுதியில் உன் இதயத்துள் என் உயிர் நுழைத்தேன்!

ஆசை

என் துன்பங்களை எல்லாம் சுருட்டி மடித்து தூரம் வீசுகிறாய் ஒவ்வொரு முறை என் பெயர் சொல்லும் பொழுதும்! #ஆசை

கர்வங்கள்

ஐ லவ் யு என்பதில் சரிந்து விடுகிறது, ஆணின் கர்வங்கள்

சக்தி

உன் மௌனதிற்கு மட்டுமே உண்டு என் உயிர் தொடும் சக்தி!

நட்பு

இரு நண்பர்களுக்குள் சண்டையாயின் சமாதானப்படுத்தி நேரத்தை விரயமாக்காதீர்கள்... அதை நட்பு பார்த்துக் கொள்ளும்

காதல்

மொட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட வாசமாய் சொல்லப்படாத என் காதல்......

விழிகள்

நம் காதலை நான் உணர்ந்ததை உணராததுபோல் நடித்தாலும்; உனக்கு உணர்த்துவதை நிறுத்திவதில்லை என் விழிகள்.....

உன்னுடன் நான்

நான் - இயல்பு நவிற்சி அணி! 
உன்னுடன் நான் - உயர்வு நவிற்சி அணி!!

கோபம்

உணர்ச்சிவசப்பட்டு ஒரு முத்தமிட்டதற்கேன் இத்தனை கோபம்..... அவசரப்பட்டு அதை திருப்பித்தருமளவு?

கழிப்பறை

வெளியே ஒரு ஆணின் படமும்,உள்ளே பல பெண்களின் படமும் வரையப்பட்டிருப்பதுதான் ஆண்களின் கழிப்பறை.

நேசம்

நாம்இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் உனக்கு எனக்கும் இடையே உள்ள இடைவெளியில் அமர்ந்திருக்கிறது நமக்கான நேசம்

மருதாணி

எல்லோரும் நிலாவைக்காட்டி சோறூட்ட, நான் மட்டும் நிலவுக்கே சோறூட்டுகிறேன், என்னவள் கையில் மருதாணி

கவரப்படுகின்றனர்

ஆண் பெண்ணின் அழகாலும், பெண் ஆணின் அணுகுமுறையாலும் கவரப்படுகின்றனர் நிரந்தரமில்லையென்றாலும்.......

வெட்கத்தைத் தருவேன்

வெட்கத்தைக் கேட்டாலும் வெட்கத்தைத் தருவேன், வேறெது கேட்டாலும் வெட்கமே தருவேன்... ♥ ♥

அடம்பிடிப்பேன்

லட்சம் பல வலிகளை நீ கொடுத்தால் இன்னும் இன்னும் வேண்டுமென அடம்பிடிப்பேன்..............

நட்பு

நண்பன் வெற்றி பெறும் போது 'அவன் என் நண்பன்' என பெருமை கொள்! தோல்வி அடையும் போது 'நான் உன் நண்பன்' என அருகில் நில்!! 

சோம்பேறித்தனம்

பத்து மணிநேரம் தூங்குறது சோம்பேறித்தனம் இல்ல! ஒரு மணிநேரம் தூங்காமல் சும்மாவே படுத்திருப்பது தான் சோம்பேறித்தனம்..!

Saint Thomas More

Sex and religion are closer to each other than either might prefer."- Saint Thomas More (1478-1535)

—H. L. Mencken

All men are frauds. The only difference between them is that some admit it. I myself deny it.

—Marcel Proust

The real voyage of discovery consists not in seeking new lands but seeing with new eyes.

—Lao-Tze

Watch your thoughts; they become words.
Watch your words; they become actions.
Watch your actions; they become habits.
Watch your habits; they become character.
Watch your character; it becomes your destiny.
—Lao-Tze

—Lin-Chi

. When hungry, eat your rice; when tired, close your eyes. Fools may laugh at me, but wise men will know what I mean.
—Lin-Chi

Ambrose Redmoon

. Courage is not the absence of fear, but rather the judgement that something else is more important than fear.
—Ambrose Redmoon

நாணச்சிறகுகள்

குறும்பு கொப்பளிக்கும் கண்களோடும், சில்மிஷம் செழிக்கும் உதடுகளோடும் நீ நெருங்குகையில், படபடக்கின்றன என் நாணச்சிறகுகள்...

பூக்களுக்கு வலிக்குமென

வழியெங்கும் பூக்களைத் தூவிவிடுகின்றாய் பாதம் வலிக்குமென, விலகி நடக்கிறேன் நான் பூக்களுக்கு வலிக்குமென...♥♥

முத்தமிடு

முத்தமிடு' என்று கன்னத்தைக் காட்டினால், கண்களை மூடிவிட்டு இதழ்களுக்குத் தாவுகிறாய்... .♥♥

வெட்கம்

வெட்கம் தொலைத்ததை எண்ணி வெட்கப்படுகையில், சமாதானம் செய்கிறது காதல்... ♥ ♥

காமமாய்

கோபத்தில் பிணங்குகையில்,மெல்ல விரல்பற்றி,தலைகோதி,மென்மையாய் முதுகுவருடி,நெற்றியில் இதழ் பதித்தாய்.நான் காதலென்பேன்,சிலவேளை இவையே காமமாய்

உனக்கு பரிசு

கைகளை மூடிக்கொண்டு 'ஒரு பரிசு இருக்கு உனக்கு' என்று நெருங்குகிறாய், உன் கைகளுக்குள் இல்லை கண்களுக்குள் இருக்கிறது எனக்கான பரிசு...♥ ♥

இறுக்கியணைக்கும்

வழுக்கியிறங்கும் குழந்தையாய் நழுவுகின்றேன், இறுக்கியணைக்கும் அன்னையாய்த் தழுவுகின்றாய்...♥ ♥

தனிச்சிறப்பு

'உன் தனிச்சிறப்பு என்ன'வென்று என்னிடம் யாரேனும் கேக்கும்போது... உன் பெயர் சொல்லத் துடிக்கிறது மனது!

# கடவுள்

இருந்திருந்தால் நூறில் இறந்திருப்பார். இல்லாமல் இருப்பதால்தான் இன்னும் வாழ்கிறார்! 

அணைத்துக்கொண்டாய்

எவ்ளோ நாள்தான் குழந்தையாவே இருப்பியோ' என சலித்துக்கொண்டாய்! நீ அன்னையாக(வும்) இருக்கும்வரை என்றேன்.அணைத்துக்கொண்டாய்!!

எனக்கு

உனக்கில்லை' என கைக்குள் மிட்டாய் பதுக்கினேன். 'எனக்கு..' எனக்கேட்டு அருகில் வந்த நீ கைக்குள் இருந்த மிட்டாயை கண்டுகொள்ளவேயில்லை

சேலை

உனக்கு பிடித்த வண்ணத்திலான சேலை அணிந்து நான் வரும்போதெல்லாம் மறக்காமல் புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன் உன் கண்களால்!

கைப்பிடித்து

ஊடலில் அலையென சிறு தொலைவு செல்லும் என்னை... கடலென கைப்பிடித்து இழுத்து கலந்து விடுகிறாய் எப்போதும்!

பிரிந்து விடுவோம்

பிரிந்து விடுவோம் என விளக்கி நீண்டதொரு கடிதமெழுதி.... முடிவில் கையெழுத்திட்டேன் உன் பெயர் சேர்த்து..

வலி

காயங்கள் எனக்கு என்றுமே வலித்ததில்லை..ஏனோ வலிக்கிறது காயங்களுக்கு நீ காரணமாகும் போது....

பள்ளிக்கூடம்

படிச்சவன் பாடம் நடத்துறான்... படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்...
 -இந்தியா

மாவீரன் நெப்போலியன்.

என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்து கொள்ளுங்கள், நான் வெற்றி அடைய நம்பிக்கை மட்டும் போதும்- மாவீரன் நெப்போலியன்.

செருப்பு இல்லாமல் நடக்கும் அப்பா

சீதனமாக கொடுத்த பைக்கில் கணவருடன் செல்ல மனமில்லை , செருப்பு இல்லாமல் நடக்கும் அப்பாவின் கால்களை பார்க்கும் போது.

உயிர்

தெளிந்த நீரில் உன் முகம், எனக்கோ உயிர் போகும் தாகம், கை பட்டால் கலைந்துவிடும்உன் முகம், போகட்டும் உயிர் உன் முகம் பார்த்து கொண்டே.

வேடம்

ஆத்திகனின் கடவுள் நம்பிக்கை நாத்திகனிடத்தல் தன்னம்பிக்கை வேடம் போட்டுக்கொள்கிறது

குடம்

தூக்கி நடக்கும்போதுதான், குடம்கூட தழும்பும். இறக்கி வைத்துவிட்டால்....? கவலைகளும் அப்படியே!

கோலம்

முயற்சி என்பது புள்ளி. விடாமுயற்சி என்பதுதான், கோலம். வெறும் புள்ளியை இரசிக்க முடியாது.

பரிசு.

முதன் முதலாக நீ எனகளித்த பரிசு.

- காதல்

பின் இருக்கை

பேருந்தின் பின் இருக்கையில் நான் அமரும் போதெல்லாம்,நாம் பரிமாறிக்கொண்ட முத்தங்கள் நினைவுக்கு வருகிறது...
ஏனடி பெண்ணே என்னை காதலித்தாய்