கணிபொறி

Analog - உவமம்
Digital - துடிமம்
Computer - கணிபொறி
CPU - மையச் செயலகம்
Memory - நினைவகம்
Keyboard - விசைப்பலகை
Monitor - திரையகம்
Mouse - சுட்டி, சொடுக்கி
Floppy Disk - நெகிழ்வட்டு
Hard Disk - நிலைவட்டு
Compact Disk - குறுவட்டு
Disk Drive - வட்டகம்
Printer - அச்சுப்பொறி
Inkjet Printer - மைஅச்சுப் பொறி
Dot Matrix Printer - புள்ளி அச்சுப்பொறி
Laser Printer - ஒளியச்சுப் பொறி
Ploter - வரைவு பொறி
Scanner - வருடு பொறி
Modem - இணைக்கி
Input - உள்ளீடு
Output - வெளியீடு
Network - பிணையம்
Internet - இணையம்
WWW - வைய விரிவலை
Website - வலையகம்
Portal - வலைவாசல்
Webpage - வலைப்பக்கம்
Webcasting - வலைபரப்பு
Netizen - வலைவாசி
Browser - உலாவி
Server - புரவன்
Client - கிளையன்
Terminal - முனையம்
Workstation - பணி நிலையம்
Node - கணு
Search Engine - தேடு பொறி
E-mail - மின் அஞ்சல்
E-Commerce - மின் வணிகம்
Download - பதிவிறக்கம்
Upload - பதிவேற்றம்
Encryption - மறையாக்கம்
Decryption - மறைவிலக்கம்
Hackers - ஊடுருவிகள்
E-Cash - மின்பணம்
IT - தகவல் தொழில்நுட்பம்
Text - உரை
Graphics - வரைகலை
Sound - ஒலி
Audio - கேட்பொலி
Video - நிகழ்படம்
Photo - நிழற்படம் / ஒளிப்படம்
Microprocessor - நுண்செயலி
ROM - அழியா நினைவகம்
RAM - நிலையா நினைவகம்
Mother Board - தாய்ப்பலகை
Expansion Slot - விரிவாக்கச் செருகுவாய்
Animation - நகர்படம்
Motion capture - அசைவுப்பதிவு
Wire freame - வலைப்புள்ளிச்சித்திரம்
Rendering - உருப்பெருதல்
Texture - புறத்தோற்றம்
Multimedia - பல்லூடகம்
Data - விவரம் / தகவல்
Column - நெடுவரிசை
Row - கிடைவரிசை
Table - அட்டவணை
Data Base - தகவல் தளம்
Word Processor - சொல் செயலி
Spread Sheet - விரிதாள்
Operating System - இயக்க முறைமை
Platform - பணித்தளம்
GUI - வரைகலைப் பணிச்சூழல்
User - பயனாளர் / பயனாளி / பயனர்
Password - நுழைசொல்
Application Package - பயன்பாட்டுப் பணித்தொகுப்பு
File - கோப்பு
Document - ஆவணம்
Directory - கோப்பகம்
Folder - கோப்புறை
Variable - மாறி
Constant - மாறிலி
Instruction - ஆணை
Command - கட்டளை
Program - செயல்வரைவு
Function - செயல்கூறு
Interpreter - ஆணைமாற்றி
Compiler - மொழிமாற்றி
Translator - மொழிபெயர்ப்பி
Binary Language - இரும மொழி
Window - சாளரம்
Menu - பட்டியல்
Icon - சின்னம் / குறும்படம்
Font - எழுத்துரு
Erase - அழி
Delete - நீக்கு
Remove - அகற்று
Format - வடிவமை / அழகமை
Virtual - மெய்நிகர்
Virtual Reality - மெய்நிகர் நடப்பு
Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு
Remote Control - தூர இயக்கி
CD Player - இறுவட்டு இயக்கி
Representative - பிரதிநிதி - சார்பாளர் /சார்பாக இருப்பவர்
Democracy - ஜனநாயகம் - குடியாட்சி / மக்களாட்சி
Dictatorship - சர்வாதிகாரம் - வல்லாட்சி / அடக்குமுறையாட்சி
Dictator - சர்வாதிகாரி - வல்லாட்சியார் / அடக்கி ஆள்பவர்

நான்நீ

காய்ச்சல் என்று நீ முனகும் பொழுதுகளிலெல்லாம் கஷாயம் குடித்துக்கொண்டிருக்கிறேன் நான்...

காரணங்கள்

பிடித்தவர்களுடன் பேசிக்கொண்டிருக்க காரணங்கள் பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன

வின்வெளி

உலகைவிட்டே சென்றார்கள் உயிருடன்
#வின்வெளிக்கு.

சிறை

கல்லில் இருந்து விடுதலை அடைந்த சிலை ஒன்று கோவிலில் சிறை வைக்கப்பட்டுள்ளது,சகல மரியாதைகளுடன்.

இயற்கை

பூக்களை எல்லாம் படைத்தும் பின் திருப்தியடையாமல் குழந்தைகளை படைத்திருக்கிறது இயற்கை!

அவஸ்தைதான்

எண்ணுவது போல் என் நேசம் அள்ளிக் கொட்டவும் இயலாமல்...
நீ வாரி வழங்கும் நேசம் நாணம் விட்டு அள்ளவும் இயலாமல்....

'காதல்' ஒரு அவஸ்தைதான்!

பழங்கதை

பழங்கதையாகி போனது தனிமை இனிமை என்பது, நீ வந்த பிறகு.

நம்பிக்கை

தன்மீது நம்பிக்கை இல்லாதவன் கிரகங்களின் மீது நம்பிக்கை வைக்கிறான்

உரிமை

தவறெனத் தெரிந்தாலும் சிலரிடம் உரிமை எடுத்துக்கொள்வதை தவிர்க்கமுடிவதில்லை...

ரௌத்திரம் பழகு! தமிழா ரௌத்திரம் பழகு!


அச்சம் தவிர்
-உன்னிடமுள்ள பயத்தை நீக்கிவிடு
ஆண்மை தவறேல்
-வீரத்தைக் கைவிடக்கூடாது.
இளைத்தல் இகழ்ச்சி
-மனம் தளர்ச்சியடைதல் தாழ்வைத் தரும்
ஈகை திறன்
-வறியவருக்குக் கொடுப்பதே உயர்ந்த குணமாகும்.
உடலினை உறுதி செய்
-உடலை வலிமையாக்குக.
ஊன் மிக விரும்பு
-உணவை மிகவும் விருப்பத்துடன் உண்க
எண்ணுவது உயர்வு
-உயர்வைத் தருகின்ற எண்ணங்களையே நினைப்பாயாக.
ஏறுபோல் நட
-ஆண் சிங்கத்தை போல் நிமிர்ந்து நடக்க வேண்டும்..
ஐம்பொறி ஆட்சி கொள்
-மெய் வாய் கண் காது மூக்கு ஆகிய ஐந்து உறுப்புகளையும் கட்டுப்படுத்துக.
ஒற்றுமை வலிமையாம்
-ஒற்றுமையாக வாழ்வதே வலிமையை உண்டாக்கும்..
ஓய்தல் ஒழி
-சோம்பலை நீக்கி விடுக.
ஒளடதம் குறை.
-மருந்து உண்பதைக் குறைத்துக் கொள்..

- மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்

எழுத்தாளர் பார்ஹே

கொலைகாரர்கள் அடையாளம் காணப்பட்டவர்கள். அவர்களிடம் நாம் பயம் கொள்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், சாதாரண மனிதன் எந்த நேரமும் ஒரு கொலையைச் செய்வதற்குச் சாத்தியம் இருக்கிறது.
- எழுத்தாளர் பார்ஹே

அன்னை தெரசா

இன்றைய காலகட்டத்தில் ஏழைகளைப் பற்றிப் பேசுவது நாகரிகம் ஆகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக ஏழைகளுடன் பேசுவது நாகரிகம் அற்றதாக ஆகி விட்டது.
- அன்னை தெரசா

‎.......ஒரு பறவையின் சிலுவை.......


இறைவன் மலிவாய்ப் போன
இந்த பிரபஞ்சத்தில்
இரையை தேடி
ஒரு தாய் பறவை
வான் வீதிகளில்
வந்து கொண்டுயிருகிறது.

பால் சுரக்கும் மார்பில்லாததால்
பசித்திருக்கும் குஞ்சுகளுக்கு
பரிமாற
உணவை தேடி
உலா வந்து கொண்டிருக்கிறது.

மனிதர் கண்ணில் பட்டுவிட்டால்
மரணத்திற்கு பின்
தன் மேனியில்
மசாலா தடவபடலாம்.
தன்னை நம்பியிருக்கும்
அலகு முளைக்காத
அக்குஞ்சுகள் அனாதையாகிவிடலாம்
அச்சத்தில் வருகிறது
அன்னை பறவை.

அப்பாவை அறிமுகபடுத்தும்
அவசியம் இல்லை.
கூட்டில் கிடக்கும் குஞ்சுகளுக்கு
அம்மாவைவிட்டால் உறவுயில்லை.

நேரம் தவறினால்
நேர்மை மனிதர்கள்
நெடுஞ்ச்சாலைக்காக
கூடு கட்டிய மரத்தை
கூறு போட்டுவிடுவார்கள்.

தன் குஞ்சுகள்
பாம்புகளுக்கு பலியாகிவிடலாம்.
கழுகுகள் களவாடிவிடலாம்.
பயத்தில் பறவை பட படக்கிறது.

தற்பொழுது
தன் சாயலுடைய
எந்த பறவையும்
தரிசிக்க முடியவில்லை
தன் இனம் அழிவதை
தாய் பறவை உணர்கிறது.
வம்சம் காக்கவாது
பிள்ளைகளை
வளர்க்க வேணும்
இடைவிடாமல்
இரை தேடுகிறது.

மாமிசம் இல்லாவிடில்
மனிதர்கள் உண்ண சைவமிருக்கு.
மாண்டு போகும் எம் இனம்
காக்க ஒரு தெய்வமிருக்கா?
பதில்லில்லா கேள்வியொன்றை
பறவை கேட்கிறது.
பறந்து பறந்து
சிறகு வலிக்கிறது.

கிழிந்த ரெக்கைகளோடு
கிழட்டு பறவை
கிழக்கை நோக்கி பறக்கிறது.

மழை பெய்தால்
கூட்டுக்கு மேல் கூரையில்லை
மர இலைகள் இருப்பதால்
இதைப்பற்றி கவலையில்லை.

தண்ணீர் பந்தல்லில்லாத
மேக வீதிகளில்
வேகம் பிடிக்கிறது.
தாகம் எடுக்கிறது.

மனசுமையை மற்றவரிடம்
பகிர்ந்திட ஒரு மொழியில்லை
வாழ்ந்தே ஆகா வேண்டும்
வேறு வழியில்லை.

பல தடைகளை கடந்து வந்த
பறவைக்கு தெரிகிறது......
வலிகள் நம்மிடம் வாலாட்டும்
வாழ்க்கை ஒரு போராட்டம்.

இனமழியும் பறவை
இறுதியாக இருப்பிடம்
வந்தடைகிறது.
நிகழ்ந்ததை கண்டு
நெஞ்சமுடைகிறது.

அடித்த புயலில்
ஆலமரம் அடியோடு
மண்ணில் மல்லாந்து கிடக்கிறது.
தன் நான்கு குஞ்சுகளில்
இரண்டு
இறந்து கிடக்கிறது.

சிரமங்கள் சிறகாகிறது
சிறகுகள் சிலுவையாகிறது.

மறித்து போன இரு குஞ்சுகள்
இனி
உதயமாகும் செடிக்கு
உரமாகட்டும்.
வரும்காலத்தில்
வாடும் பறவைகள்
வாழ
அது மரமாகட்டும்.

பல தடைகள் கடந்த
பறவைக்கு தெரிகிறது........
வலிகள் நம்மிடம் வாலாட்டும்
வாழ்க்கை ஒரு போராட்டம்.

மனிதரைப்போல்
துயரம் தாங்காமல் தூக்கு போடவும்
தடைகளை கண்டு தற்கொலை செய்யவும்
தெரியாத
தன்னம்பிக்கை பறவை
தன் குஞ்சுகளை சுமந்து
வேறு மரம் செல்கிறது...
வேதனையும் வாழ்க்கையும்
நீள்கிறது........................


......தன்னம்பிக்கையோடு..............
-------தமிழ்தாசன்--------

அரிசி மரம்

சமீபத்தில் வாசித்ததில்...
வலித்தது...............

"அப்பா, அரிசி மரம் எப்படி இருக்கும்?"

---கடிதத்தின் கதவுகள்----


காற்றில் ஒரு கடிதம்
பறந்து வந்து
என்
கால்களுக்கு கீழே விழுகிறது.

அந்த கடிதத்தின் கதவுகள்
திறக்கப்படவில்லை என்பது
தீர்மானமாய் தெரிகிறது..

அடுத்தவரின்
கடிதம் படிப்பது
அநாகரீகம்.
ஆனால்
அதில்தான்
எனக்கு
அதிக தாகம்.

கன்னிகழியாத
அந்த கடிதத்தை
கற்பழிக்க
இந்த அயோக்கியனுக்கு
அவ்வளவு ஆசை...

எடுத்து பார்க்கும்போதுதான் தெரிகிறது
எந்த முகவரியும்
கடிதத்தில்
எழுதப்படவில்லை...

என்னால்
கணிக்க முடிகிறது
இது
காதல் கடிதம் தான்.

காதலை சொல்ல
துணிவு இல்லாத
எதோ ஒரு
மடையனின் மடல் இது.

கடிதத்தின்
உதடை
உரித்து
உள்ளே நுழைகிறேன்...

அந்த
வெள்ளை கடிதத்தில்
வெறும் நான்கு எழுத்துகள்தான்
இருந்தது....

படித்ததும்
உள்ளம் நொறுங்கி போகிறேன்..
உரியவரிடம்
கடிதத்தை
உடனே சேர்க்க வேண்டும்...

தெளிவில்லாத இந்த
கடித கண்ணாடியில்
எழுதியவர் முகம்
தெரியவில்லை.

இதை
எழுத காரணமானவரை
கண்டுபிடிப்பது
சுலபமில்லை.

வீதியிலே
இந்த கடிதத்தை
வீசியெறிய
விரும்புகிறேன்.

எறிவதற்கு முன்
அதில்
எழுதியிருந்ததை படிக்கிறேன்
கேளுங்கள்.
" என் சாவுக்கு யாரும் காரணமில்லை"

----தமிழ்தாசன்----

----விதவை பூ----


பூக்களெல்லாம்
பூக்கூடையிளிருந்து
தாவி குதித்து
தற்கொலை செய்ய
தயாரானது...
வீதி வீதியாக சென்று
பூ விற்ப்பவள்
விதவையான போது...

--தமிழ்தாசன்-- —

பழம்

apple : அரத்திப்பழம் , குமளிப்பழம் .
orange : கமலாப்பழம் , நாரத்தை, நாரந்தம் , கிச்சிலி ,
நாரந்தம்பழம் , தோடம்பழம் .
strawberry : செம்புற்றுப்பழம் .
durian : முள்நாரிப்பழம் .
blueberry : அவுரிநெல்லி .
watermelon : குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் .
cranberry : குருதிநெல்லி .
blackberry : நாகப்பழம் , நாவல் பழம் .
peach : குழிப்பேரி .
cherry : சேலாப்பழம் .
kiwi : பசலிப்பழம்

‎....நான் எழுதிய ஹைக்கூ சில....



* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும் சிறுவன்..

* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை
முதியோர் இல்லத்தில்..

* அழைத்த குரலுக்கு ஓடி வர
ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இருந்து கிடந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.


* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.

* குங்குமம் வர இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவையானாள்.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலிஎடுக்கிற போது
அம்மா என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.

----தமிழ்தாசன்---

‎----என் காதல் கவிதைகள் சில----


* சிகரெட் புகையும்
உன் சிறு பார்வையும்
என்
நுரையீரல் வரை
நுழைந்துவிட்டு வருகிறது...

*குளத்தில் நீ குளிப்பதை பார்த்து
குழம்பிப் போன இளசுகள் எல்லாம்
ஊருக்குள் ஒரு வதந்தியை பரப்பிவிட்டது...
"ஒரு தாமரை மட்டும்
தாவணி கட்டி இருக்கிறது" என்று..

*திருவிழாத் தேர்
உன் வீதியில் வலம் வருகிறது.
நீயோ
தேர் இழுப்பதை வேடிக்கை பார்க்கிறாய்.
தேரை இழுப்பவர்களெல்லாம்
உன்னையே வேடிக்கை பார்கிறர்கள்.

*தென்றல் தழுவினால் கூட
தேகம் கீறல் படும்
மெல்லிய ஸ்பரிசம் உன்னது..

*பேச்சு போட்டியைப் போல்
மௌனப் போட்டி
எங்காவது நடந்தால் சொல்லுங்கள்.
அதில் கலந்து கொள்ள
ஒரு காதலி இருக்கிறாள் எனக்கு.

*வாழைத்தோப்பு வரப்போரம்
நீ நடந்து வந்தால்
வாழைப் பூக்கூட
வயசுக்கு வந்துவிடும்..

*ஏய் கருவாச்சி
நீ பவுடர் பூசுகிறபோது
உன் முகம் வெளுத்துப் போகிறது.
பாவம் பவுடர் கருத்து போகிறது.

*உன் வீட்டில் கிளி
நீ வளர்க்கிறாயாமே?
ஏற்க்கனவே
உன் அம்மா
வீட்டில் மயில் வளர்கிறாளே
அது போதாத?

*அன்பே!
வெற்றியில் கிடைக்கும்
பரிசுகளை விட
தோல்வியில் கிடைக்கும்
உன் தோள்கலையே
அதிகம் விரும்புகிறேன்.

*அந்தி சாயும் பொழுது
நீ கால் நனைக்க
கடற்க்கரை வருகிறாய்.
உன்னைப் பார்த்ததும்
மாலை நிலவு வந்துவிட்ட
மன நிம்மதியில்
மெல்ல மறைந்தது சூரியன்.

*"இப்படி இருப்பதற்கு பதில்
ஒரு செருப்பாக பிறந்திருக்கலாம்"
இடம் கிடைக்காமல்
நீ நின்று பயணித்த பொது
பேருந்து இருக்கைகள்
பேசிக்கொண்டன இப்படி...

*கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலியை
கடிக்கும் பழக்கம் உள்ள கண்மணியே...
உலகெங்கும்
தங்கத்தின் விலை
உன்னால்தான் உயருகிறது என்பதை
உணர்வாயா?

*தேரில் அம்மன்
உன் வீதியில் வலம் வந்தால்
அது திருவிழா.
தேவதையே
நீ குடைப் பிடித்து நடந்து வந்தால்
அது தெருவிழா.

*உன் கண்களை பார்த்து
காதல் சொல்வதை விட
கொலை செய்வது
எளிதாக இருக்குமென்று
எண்ணுகிறேன்.
உன்னை காதலித்த பிறகு
ஒரு கட்டேரும்பை கூட
மிதித்து விட கூடாது என்பதில்
மிகவும் கவனமாக இருக்கிறேன்.

*புல் வெளியில் நடந்தால்
புற்களுக்கு வலிக்குமென்று
நீ புலம்பி தீர்த்துவிடுவாய்.
பூவே!
நீ புலம்புவது கூட
எனக்கு வலிக்கும் என்பதை
உனக்கு எப்படி
புரிய வைப்பது?

*நீ பேசினால்
மழலைகள் எல்லாம்
மயங்கிவிடுகிறதே!
உன் பெயரென்ன
மிட்டாய் - பேச்சியா?

எறும்பைவிட உனை சுமப்பது
எளிதாய் இருக்கிறதே!
உனை வயிற்றில் சுமந்தது
பட்டாம்பூச்சியா?

*தனியே என்னை தவிக்க விட்டு
உன் அம்மாவின் ஊர்ருக்கு
நீ போன நாட்கள்தான்
எனக்கு அம்மாவாசை.

* உன்னை பொழுதுக்கும் பார்த்து பார்த்து
சலித்து போன எனக்கே
மறுமுறை பார்க்கும்போது
மயக்கம் வருகிறதே!
புதிதாய் உன்னை
புடவையில் பார்க்கும்
இளைஞனின் இதயம்
என்ன பாடு படும்?

*சிப்பிக்குள் கருப்பு முத்து
அவள் விழிகள்.
தமிழ் குழந்தை தவழும் வீதி
அவள் உதடு.
பூமிக்கு புளித்துப் போன முத்தம்
அவள் பாத சுவடு.

*ஆயிரம் உறவுகள் சூழ
அதன் நடுவே நான் இருந்தாலும்
நீ இல்லாத
அரை நொடி பொழுதிலும்
அனாதையாகிவிடுவேன் அன்பே!

*உன்னை கடந்துப் போனவர்களை விட
காதலித்து போனவர்கள்தான் அதிகம்.

* என் காதல் என்பது
உனக்கு வெறும்
இன்பமடி.
உன் காதல்
எனக்கு மறுஜென்மம்மடி..

---தமிழ்தாசன்----

--சோக காதல் கவிதைகள் சில---

*கல் நெஞ்சம் கொண்டவளே!
தயவு செய்து
உன் தாயிடம் கேட்டுப் பார்.
காதல் வராமல் இருக்க
தவழும் வயதில் உனக்கு
தடுப்பூசி ஏதும் போடப்பட்டதா என்று..

*எப்படியும் ஒரு நாள்
என்னை ஏமாற்றி விடுவாய்
என்று தெரிந்தே
உன்னை காதலித்தேன்.
ஆனால்
என்றாவது ஒருநாள்
என்னை காதலிப்பாய்
என்று நினைத்து நினைத்துதான்
ஏமாந்து போனேன்.

*காதல் ஆயுதம் கொண்டு
பெண்களால் கொலை செய்யப்படும்
ஆண்களின் மரணத்திற்கு பெயர்
தற்கொலை.

*எல்லோருக்கும் வருடத்தில்
ஒரு முறைதான் ஏப்ரல் -1.
எனக்கோ
நீ வருகிறபோதெல்லாம்
ஏப்ரல் -1.

*உன்னால்
அலட்சியமாய் தூக்கி எறியப்பட்ட
மிட்டாய் காகிதங்கள் கூட
என் அலமாரிக்குள்
பத்திரமாய் இருக்கும் போது.
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
என்னையே தூக்கி எரிய?

*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.

*கண்ணீர்- சோகம்- வலி
வேதனை - சாவு.
இப்படி எல்லா
சோக உணர்வுகளையும்
கவிதைகளில் என்னால்
சொல்லிவிட முடிகிறது.
ஆனால்
உன் கணவனோடு கைகோர்த்து
நீ என்னை கடந்து போகையில்
தேம்பி தேம்பி அழும்
இடிந்து போன என் இதயத்தின் குமறலை
விவரித்து சொல்ல முடியவில்லை.
உன்னை மறக்க முடியவில்லை.

*குள்ளநரிகள் குடியிருப்பு பகுதிக்குள்
வராததற்கு ஒரே காரணம்.
நீ அவைகளையும்
ஏமாற்றிவிடுவை என்பதால்தான்.

*கட்டாயம் காதலிக்க வேண்டும் என்பது
ஆண்களுக்கு எழுதப்படாத தலையெழுத்தா?
காதல் என்பதே
தேவதைகளின் தேசிய விளையாட்டா?

*நீ மீன் பிடிக்கவும்
மின்சாரம் எடுக்கவும்
நான் ஒன்றும் தண்ணீர் இல்லையடி.
உன்னால் அழுது அழுது
என் அம்மாவின் இழவுக்கு சிந்த
ஒரு துளி கண்ணீர் இல்லையடி.

----தமிழ்தாசன்--

பூங்கா

புற்களின் மீது நடக்க
தடை செய்ய பட்டிருக்கும்
ஒரு பூங்காவில் நீயும் நானும்...

நீ: அப்படியென்றால் நானும் நடக்க கூடாதா?

நான்: பட்டாம்பூச்சிக்கு தடை என்று பலகையில் எழுதப்படவில்லையே!

நீ: போதும்... ரொம்ப பேசாத...மழுப்பாமல் சொல்... பிறகெதற்கு இங்கே இந்த வாசகம்?

நான்: இது வாசகம் இல்லை கண்ணே...

நீ நடந்தால்...
உன் பூவிதழ் பாதம்
புல் கீறி
புண்ணாகிவிடும் என்று
அறிந்த யாரோ ஒருவர்
எதார்த்தமாய் எழுதிய
கவிதை வரிகள்.... இது.

----தமிழ்தாசன்---

ரோஜா

தேரில் அம்மன்
உன் வீதியில் வலம் வந்தால்
அது திருவிழா..
தேவதை நீ குடை பிடித்து
நடந்து வந்தால்
அது தெருவிழா...

கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலியை
கடிக்கும் பழக்கமுள்ள கண்மணியே!
உலகெங்கும்
தங்கம் விலை
உன்னால்தான் உயருகிறது என்பதை
உணர்வாயா?

உனக்கும்
நிலவுக்கும்
ஒரு வித்தியாசம் கண்டேன்.
பெரிதாய் ஒன்றும் இல்லை
பெண்ணே..
பெயர் மட்டும் தான்.

உன்னை முத்தமிடுகையில்
என் முள் மீசை மீது
மலர்ந்துகிடக்கும்
உன் முகம் தானே -- ரோஜா..

எனக்கு பூஜையறை
எதுவென்று தெரியுமா கண்ணே...
உன் வீட்டு ஜன்னல்தான்.

இனத்தின் எழுச்சி.

என் எழுத்து என்பது
வெறும் எழுத்து அல்ல.
என் இனத்தின் எழுச்சி.


வெறும் 26 ஆங்கில எழுத்துகளிடம்
அன்னை தமிழின் 247 எழுத்துக்களும்
தோற்று நிற்பதா?
பீசா பர்கர் வாங்க
உன் வீட்டு
சோற்றை விற்பதா?

கிளையில் இருக்கும்
ஒரு இலையை தீண்டினாலும்
என் வேர் ஆடும்.
தலை போகும் வரை
என் எழுத்துக்கள்
தமிழுக்காக போராடும்.

என் எழுத்தை கொண்டு
தீயவரின் கழுத்தை அறுக்கலாம்.
என் எழுத்தை கொண்டு
பட்ட மரத்திலும்
பழத்தை பறிக்கலாம்.

என் பேனாவின் கைகள்
குடிசை இல்லாதவர்க்கு
குடைபிடிக்கும்.
என் இனத்தை
இழிவு செய்யும்
ஈனப் பிறவிகளின்
இடையை ஒடிக்கும்.


எல்லைகளை தாண்டி என் எழுத்து வரும்.
தமிழ் இன பெருமையை இழுத்து வரும்.

முழக்கம் வேண்டாம்
தமிழர்கள் முனங்கினால் போதும்
என் பேனா முழிக்கும்.
பசியில் ஒரு சின்னசிறு
பறவை வாடினாலும்
என் வயிறு வலிக்கும்.

மிதித்தாலும்
மீண்டும் மீண்டும்
முளைக்கும் பயிர் நான்.
மீதமிருக்கும்
மீசை பாரதியின்
உயிர் நான்...

என்னை கொலை செய்தாலும்
வலியில் அம்மா என்று கத்துமே தவிர
எவர்க்கும் ஆமா போடாது.

நான் அழுத்தினால்
நிலவுகூட
மண்ணில் விழுந்து கிடக்கும்.
என் எழுத்தினால்
தமிழ் இனம்
எழுந்து நிற்கும்.


என் எழுத்து என்பது
வெறும் எழுத்து அல்ல.
என் இனத்தின் எழுச்சி.

--கோபத்தோடு--
--தமிழ்தாசன்--

----தூக்கு மர நிழலில்------

மரண பேய்களுக்கு
மதியச் சாப்பாடு -ஒரு
மாவீரன் என
தூது அனுப்பியது
தூக்கு மரம்..

தூக்கிலிட்டதும்
மரத்திலிருந்து மண்ணில் விழும்
மாமிசத்தை
தூக்கி செல்ல
துஷ்ட பேய்கள்
துரத்தி வந்து
தூக்கு மரத்தை.

தன் மன்னனின் மரணம் காண
கூட்டமாய் மக்கள் கூடி இருந்தனர்.

கர்ப்பிணி கழுத்திற்கு
காயிற்று வளையலிட்டு
கவுரவிக்கும்
சீமந்தம் நடத்தி வைக்க
வெள்ளை சீமான்களும்
வந்து நின்றனர்..

நிஜ உருவத்தை கண்டால்
நிற்கும் மக்கள்
நிலை குலைந்துவிடுவார்கள் என்பதால்
மனிதனைப் போல்
மாறுவேசமிட்டு கொண்டது
மயானப் பேய்கள்.

கொடும் பசியில் இருக்கும்
குட்டி பிசாசுகளுக்கு
தூரத்தில் வரும்
விலங்கிட பட்ட மனிதன்
விழிகளுக்கு
விலாங்கு மீனாய்
விருந்தளித்தான்.

சாத்தான்களும்
சாப்பாடுக்கு தயாராகின.

இலையின் அருகே
இரை வந்துவிட்டதால்
இரைச்சலிட்டு
இந்த பேய்கள் எல்லாம்
இன்பத்தை வெளிபடுத்தின..

"பேய்களே!
சத்தமிட்டால்
நம் சாயம் வெளுத்துவிடும்.
பாவி மக்கள்
பயந்து போவார்கள்.
உணவு கீட்டும் வரை
ஊமையாய் இருங்கள்"
ஆணையிடுகிறான்
அப்பேய்களின் அரசன்.

வெயிலின் அடியில்
வெள்ளையனின் பிடியில்
வெறிப் பிடித்த
வேங்கையோன்று
வெட்டு கத்தியின் பார்வையோடு
எட்டு வைத்து
கிட்ட வருவதை கண்ட
பயங்கர பேய்கள்
பயந்து போயின..

நாகம்ப் போல்
அவன் நடந்து வருவதை கண்டு
நடுங்கி போயின..

முனங்கி கொண்டிருந்த
மக்களிடையே
முழக்கம் ஏற்படுகிறது..

" வீர பாண்டியனை
விடுதலை செய்
வீர பாண்டியனை
விடுதலை செய் "

அந்த
இந்திய பெருஞ்சுவரின்
இடி முழங்கிய பெயரை கேட்டதும்
இடுகாட்டு பேய்கள்
கருவாடு போல்
காய்ந்து போயின..

மரண அன்னையின்
மலர் மடியில் - ஓர்
மழைலை யென
நடந்து செல்கிறான்.

தூக்கு மர நிழலில் - ஒரு
தேக்கு மரம்
ஊக்குவிக்கும் தான் மக்களுக்கு
ஊற்றெடுக்கும் உணர்சிகளை
உதிர்த்துவிடுகிறது.

" முனையில் நிற்கும் எதிரிக்கு
முதுகால்
முகம் காட்டுபவன்
எறும்பு கூட
ஏறி மிதிக்கும்
எருதட "

" துணிந்தவனுக்கு
தூக்கு மரமும்
துப்பாக்கி சூடும்
வீரத் திருமகள்
வியந்து வழங்கும்
விருதட "

பசித்து காத்திருந்த பேய்கள்
ரசித்து கேட்டு கொண்டிருந்தது
அந்த
இரட்சகனின்
ராட்சச வசங்களை.

" இத் தலைவனை கண்டிருந்தால்
தற்கொலை செய்திருக்க மாட்டேன் "
தலையில் அடித்து கொண்டது
தளபதி ஆவி.

அவன்
வீரப் பேச்சில்
ஈர குலைகள்
ஆடிப் போயின.
அவன்
மோகனம் கண்டு
மோகினி பேய்களும்
மோட்சம் அடைந்தன.

தின்று கொழுத்த காதோடும்
தீராத பசி வயிற்ரோடும்
திரும்பி சென்றது
திகில் பேய்கள்.

சீமந்தம் முடிந்தது.
சீரழிவு நடந்தது.

சரித்திரத்தில்
பச்சை தமிழன்
வீரனென்று
பதிவு செய்ய....

தூக்கு மர நிழலில்
ஒரு தேக்கு மரம்
சரிந்து கிடந்தது.

----தமிழ்தாசன்-----

-----என் தமிழ் அன்னையின் தாவணி பருவம்----

சிவந்த சிப்பிக்குள்
கருப்பு முத்து.
- அவளின் மின்சார விழிகள்.

பார்வைத் தேன் பருகிவிட்டு
பட படக்கிறது பட்டாம்பூச்சி.
-அவளின் மின்மினி இமைகள்.

மீன் விழிகளுக்கு மேலே
மிளகாய்ப் போலே மீசை.
-அவளின் பூங்குயில் நிற புருவங்கள்.

பொட்டு வைப்பதெற்கென
விட்டு வைத்த இடம்.
-அவளின் நெற்றி.

நெற்றியில் நிதம்
நிலா மாற்றி கொள்ளுது நிறம்.
-அவளின் பொம்மை பொட்டு.

முகத்திலே முக்கால்வாசி
மூழ்கிப்போன புல்லாங்குழல்.
-அவளின் முள் முனை மூக்கு.

இதைப் போல் இனி யாரும்
செய்ய முடியாது பணியாரம்.
-அவளின் தின்ன முடியாத கண்ணம்.

தமிழ் குழந்தை தவழ்ந்து பழகும்
தாமரை வீதி.
-அவளின் இசைத் தமிழ் இதழ்கள்.

தாஜ்மஹால் கட்டிய பிறகு
மிச்சமிருந்த பளிங்கு கற்கள்.
- அவளின் முத்து பற்கள்.

யுத்த கள ரத்த உதடுகளில்
சிறிது நேர அமைதி சின்னம்.
- அவளின் பூப்படைந்த புன்னகை.

செந்தமிழ் சவாரி போகும் - ஒரு
செவந்தி குதிரை.
- அவளின் நடனமாடும் நாவு.

கூந்தல் கடல் அலையோரம்
கரை ஒதுங்கிய சங்கு.
-அவளின் செந்தமிழ் சேகரித்த செவிகள்.

கர்வத்தோடு திரியும்
காக்கைகளின் கட்சிக் கொடி.
- அவளின் கருந்தோகை கூந்தல்.

மூங்கில் மரம் ஒன்று
முழுகாமல் இருப்பதுப் போல்.
- அவளின் தொண்டை கழுத்து.

மறைத்து வைக்கப் பட்ட
மலர் குவியல்.
- அவளின் மல்லிகை மார்பு.

மலையின் அடிவாரத்தில்
இடைவிடாத நிலநடுக்கம்.
- அவளின் இன்னிசை இதயத்துடிப்பு.

திகட்டும் அழகில் முதலிடம்
தீராத வறுமை ஒரே ஒரு இடம்.
- அவளின் இல்லாத இடை.

நீலகிரி தோள் நீர்வீழ்ச்சி
ஐந்து நதிகளாய் உருவாச்சு.
- அவளின் கை விரல்கள்.

தேவதைகள் வாழும்
தேசத்து வரைபடம்.
- அவளின் கை ரேகைகள்.

விழி, மூக்கு, வாய்
வரையபடாத முகங்கள்.
- அவளின் நகங்கள்.

பால் ஒளி சிந்தும் பௌர்ணமி இருட்டில்
பண்படுத்தப்பட்ட பாலைவன பகுதி.
- அவளின் பின்புற அழகு.

கம்பன் தோட்டத்தில் இருந்து
காணமல் போன கரும்புகள் இரண்டு.
-அவளின் நந்தவன கால்கள்.

யார் கையும் படாத
வெள்ளை சாதம்.
- அவளின் பிள்ளைப்பாதம்.

பூமிக்கு புளித்து போன
முத்தம்.
- அவளின் பாத சுவடு.

இது
வாலிப வயதில்
காதலன்
காதலியை வர்ணிக்கும்
கவிதை அல்ல.

வார்த்தை உளியால்
சிற்பம் வடித்து.
கற்பனை வலியால்
கர்ப்பம் வெடித்து
வந்த கவிதை.
இது
என்
இனிய தமிழ் அன்னையின்
இளைய பருவம்.
என்
இதய வழியில்
பிரசவித்த உருவம்.

----காதலோடு---
---தமிழ்தாசன்---

‎-----சாதிக்கு சவுக்கடி-----

ஜாதிகள் இல்லையடி பாப்பா.
வகுப்பில் பாடம் நடக்குது...
ஜாதி சான்றிதழ் எடுத்துவாப்பா
பள்ளிகள் கேட்குது..
ஐயையோ
உலகத்தின் உதடுகள் சிரிக்குது...

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று
பாடிய பாரதியின் சாதியை
தேடி கொண்டு இருகிறார்கலாம்.

இது
சாதியை கொண்டாடும்
சகுனிகளுக்கு
என் சவுக்கடி.

தேச தலைவர்களை
சாதி தலைவர்களாய்
மாற்றிய அயோக்கியர்களுக்கு
என் செருப்படி.

கயவர்களை கையாள
சவுக்கை எடுக்கும் முன்..

தேச தியாகிகளே!
உங்களிடம் கேட்க்க
இந்த கேன சிறுவனுக்கு
சில கேள்விகள் உள்ளது.

ஐயா..
கல்விக்கு கண் கொடுத்த
கலங்கரை விளக்கம் அல்லவா நீ?
உன் கல்லறைக்கு பின்
சாதி கப்பல்கள் அல்லவா
கரை சேருகிறது.

நீ என் தேசத்து
மெலுகுவர்த்தியல்லவா?
உன் சாதியினர் ஏற்றும்
ஊதுபத்திக்கே
உருகி போகலாமா?

கர்ம வீரனே
இது தர்மம் ஆகுமா?

வேற்றுமை பாராமல்
எல்லா மக்களுக்கும்
வெளுச்சத்தை அளித்து
சிங்கத்தின் அருகே
சிம்மாசனத்தில் - அந்த
சின்ன சூரியன்
சிரிப்போடு அமர்கையில்
வள்ளல்களின் வரலாறை
அவன் வடிவத்தில் கண்டவன் நான்.

தேவரே!
சாதி சால்வைகள்
உன்
சாய சிலைகளுக்கு
விழும்போதெல்லாம்
ஒரு சூரியன்
சிம்மினி விளக்காய்
சுருங்கி போவதை பார்க்கிறேன்.

ஐயா!
உன்னை அரவணைத்து கொள்ள
எனக்கு அருகதை இல்லையா?

தத்தளித்த தமிழகத்திற்கு
கப்பல் தயரித்தவனே!
உன் பெயருக்கு
பின்னால்
பிள்ளை சேர்க்க பட்டிருக்கும் என்பதை
நான் அறிவேன்.
பிள்ளை என்று சொல்லியே
இந்த பிள்ளைகளை
உன் பிடியில் இருந்து
பிரித்து விட்டார்களே...
அதை நீ அறிவாயா?

அம்பேத்கரே!
உன் புகைப்படத்தோடு
ஊர்வலம் நடத்தி வரும் சாதியினர்
நீ
சட்டத்தை சரி செய்த
சரித்திர மேதை என்பதை
என் சமூகத்தின் முன்
சமர்பிக்காமல்
நீ ஒரு
சிறுபான்மைக்காரன் என்றுதானே
எங்கள் புத்தியின் பக்கங்களில்
எழுதி வைத்து இருக்கிறார்கள்.

என்
இதய இமய மலையின்
இறுதி நுனியில்
அமர்ந்திருக்கும் உன்னை
ஆலமர ஆணி வேர் வரை
இறக்கிவிட பார்கிறார்கள்.

நான் சொல்வது தப்பா
சொல்லும்மையா?

நீ என் அப்பா
இல்லையா?

தாழ்த்தப்பட்டோரை
தாழ்த்த பட்டோர் என்று சொல்லிவிட்டால்
கலவரம் வெடித்து விடும்
சட்டம் முழித்து எழும்.

"தாழ்த்தபட்டோரே
தலித் மக்களே
தலைவர் அழைக்கிறார்".
இப்படி உங்களை
இழிவு செய்வது
உங்கள் தலைவர்கள் தானே.

அள்ளி மலர்போல்
அனைவரும் பூத்திருக்க
இவர்கள்
கள்ளி செடி என
கரம் நீட்டி
தரம் பிரித்ததும்
உங்கள் தலைவர்கள் தானே..

எந்த சாதியினர்
தாய் வாந்தி எடுத்து
வாய் வழியாக
வந்து விழுந்தவர்கள்.

எந்த மனித சாதி
மகரந்த சேர்க்கையால்
மண்ணில் ஜெனித்தவர்கள்.

எந்த சாதியின்
சடலத்தை எரித்தால்
சந்தானம் கிடைக்கும்.
சொல்லுங்கள்
அவர்கள் தோளுக்கு மேல்
மாலையாக
காலுக்கு கீழ் கோழையாக
காலம் தள்ளுகிறேன்.

மேல் சாதியின் வயிற்றில் இருப்பது மட்டும்
கருவறை சிசுக்கள்.
கீழ் சாதியின் வயிற்றில் இருப்பது
என்ன
கழிப்பறை கொசுக்களா?

இந்த மனித மரங்கள்
ஒரு விந்தின் விதை என்பதை
ஏன் மறந்து போனார்கள்?

இங்கு வேதனைக்குரிய
வேடிக்கைகள் இதுதான்.

பெரியார் வீதியில் ஜோசியர் வீடு.
பாரதி தெருவில் சாதி ஊர்வலம்
காந்தி நகரில் கலவரம்.

இனி வரும் தலை முறையில்
சாதிக்கு சமாதி கட்டும்
ஒரு கூட்டம் வரும் என்கிற
நம்பிக்கை இருந்தாலும்.

மனிதர்களை குறை கூறி
எந்த மாற்றமும் வரப்போவதில்லை.

இறைவன் என்பவன்
ஒருவன் என்றால்.

இறைவா....
இங்கு
இறங்கி வா..

நீ எந்த சாதியில்
ஜனித்தவன்.
உலராமல் உண்மை சொல்.

இல்லையெனில்
மூன்று மதங்களின் பெயரில் நீ
முரண்படுவதால்
ஒருத்தனுக்கு தான்
பிறந்தாய் என்பதை - நான்
ஒருபோதும்
ஒத்து கொள்ள மாட்டேன்.

‎----அப்பாவுக்கு மகன் எழுதுகிறேன்----

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும்

உன்னை நினைக்க முடிகிறதே தவிர
உன்னை போல் இருக்க முடியவில்லை...

தமிழ் எழுத்துக்கள்
தலைமுறை பல கடந்தும்
உடையாமல் இருக்கிறதே!
அது எழுத்துக்கள் அல்ல
தலைவா...
உன் எலும்புகள்.

நீ கையில் வைத்திருந்த
கருவிக்கு பெயர்
பேனாவா?
இல்லை
பீரங்கியா என்ற
பீதி இன்னும்
எங்களுக்கு தெளியவில்லை.

நீ கவிதை எழுதிய காகிதங்களுக்கு
கொஞ்சம் கணம் அதிகம்...
அதனால்தான்
அந்த சாதாரண காகிதங்கள்
சாம்பல் ஆகாமல் இருக்கிறது...

ஒரு சந்தேகம் ஐயா!

ஒரே மிதியில்
உன் கவிதைகள்
தமிழ் சமூகத்தை
தவிடு பொடியாக்கிவிட்டதே!
இதை எழுதியது
யானைகளின் கையா?

பல சவுக்கடி தரும்
ஒரு பாடல் எழுத
உனக்கு தேவைப் பட்டது...
பானை நிறைய மையா?

உன் கவிதைகளை வாசிக்கிறபோது
உன் வரிகளில்
என் விரல் பட்டுவிட்டால்
சுட்டு விடும் என்று
சுதாரிப்பாய் இருப்பேன்.

படித்ததும் முடித்ததும்
இந்த
பூமியை கையால்
புளிந்துவிடலாம் என்ற
பூரிப்போடு படுப்பேன்.

நீ இன்னும் மாய்ந்து போகவில்லை..
தீ இன்னும் தீர்ந்து போகவில்லை..


உன் முறுக்கு மீசையை பார்க்கிற போது
ஒரு முறையாவது
அதை என் கைகளால்
சுருட்டிவிட வேண்டும் என்று
ஆசை படுகிறது அப்பா
இந்த மகனின் மனசு..

உன் முண்டாசை கட்டி கொண்டால்
வானம் முட்டிவிடும்.
உன் பாட்டை படித்துகொண்டால்
பயம் விட்டுவிடும்.

என்ன செய்வது அப்பா...

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும்

உன்னை நினைக்க முடிகிறதே தவிர
உன்னை போல் இருக்க முடியவில்லை...

----தமிழ்தாசன்-----

----விலைமாது விடுத்த கோரிக்கை-----

‎ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.

பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.

என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.

சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.

திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.

பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?

பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?

காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.

கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.

நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.

நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.

எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!

வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு

எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.

ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.

தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.

என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..

ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.

இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.

முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.

இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.

இறுதியாக
இரு கோரிக்கை.

என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.

என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.

----தமிழ்தாசன்---

ஊமை

பூமியில்
புன்னகை பூக்கள் ஏந்தி வரும்
என் உடன் பிறப்புகளே!

அனைத்து மொழிகளாலும்
கை விடப்பட்ட
அனாதை குழந்தைகளே!

உங்களை ஊமை என்று
உச்சரிக்கும் உதடுகளுக்கு
எச்சரிக்கை எழுதுகிறேன்.
நச்சரிக்கும்
அந்த நாவுகளுக்கு முன்
எச்சிலை துப்புகிறேன்.

அமைதிக்கு பெயர் ஊமை என்றால்
நாம் அடைந்த சுதந்திரம்
ஊமை போராட்டத்தின் உச்சம்தானே!

ஊமை கர்ப்பத்தை
உதைத்து பிறந்தது தானே
உலகின் மொழிகள்..

மௌனத்தோடு மன்றாடித்தானே
ஓசைகளும் பாஷைகளும்
சுற்றும் காற்றில்
சுதந்திரம் பெற்றது.

முதல் மனிதன்
பேசியது
உன் மொழி தானே!

காந்தி கடைபிடித்தது
உன் வழி தானே!

எனக்கு உதடு
முகத்தில் இருக்கிறது..
உங்களுக்கு
உள்ளத்தில் இருக்கிறது...

நான் பேசினால் பிறர் காதில் கேட்க்கும்.
நீங்கள் பேசினால் நிலவில் பூ பூக்கும்.

பேச்சு இழைக்கபடதவர்கள்
குழந்தைகள்.
ஆம்
நீங்கள் சற்று
பெரிய குழந்தைகள்.

காந்தியின் கைத் தறியில்
நெய்தெடுத்த நேசங்களே!
உங்களை
மௌனவாதிகள் என
மரியாதை செலுத்தி
மகாத்மாவின் மைந்தனாகிறேன்.


கோசமிடும் கொச்சை வார்த்தைகள்
ஓசைகளோடு ஒட்டிக் கொள்கிறபோது
உங்கள்
கொலுசொலியின் லயத்தை
கொலுவிருக்க வைத்தவன் மீது
கோபம் வருகிறது.

மொழியை வெளிபடுத்த
விரல்களில்
நாட்டியம் ஆடும்
நளினம் இருப்பதை பார்த்து
உங்களை அப்படியே விட்டுவிடானோ?

இறைவனும் இயற்கையும்
பேசிகொள்கிற
இருதய மொழி மௌனம்.
மனிதன் மட்டுமே
அதில் மாறுபடுகிறேன்.

இயற்கைக்கும் இறைவனுக்கும்
இடையல் இருக்கும்
இருக்கையில்
அமர வேண்டிய
அரசர்கள் நீங்கள்...

ஏன் சிப்பாய்களின் ஊர்வலம்
சிந்தனைக்குள்?

விரலுக்கும்
வீணைக்கும்
விடப்பட்ட இடைவெளி நீங்கள்.

உடைந்த புல்லாங்குழலாய்
உருகுவது ஏன்?

உரையாடுவதற்கும்
விழியன் மொழியே
விருந்தில் அமுதம்.

ஈக்களாய் இருப்பதைவிட
பூக்களாய் இருப்பதே
பெரும் புனிதம்.

உச்சரிக்கும்
உதடுகளுக்கு
உதவி செய்தே..
வார்த்தைகள் வலுவிழந்துவிட்டது.

வடுப்பட்ட வார்த்தைகளுக்கு
மயில் இறகு மருத்துவம்
உங்கள் மனதிற்குள் மட்டும்தான்.

நீங்கள்
சிரித்து கொண்டே
சகித்து கொள்வீர்களாயின்.
சில காதுகள் சுகம் காண
உங்கள்
சிறகுகள் கேட்கும்.

புதுமைகள் படைத்து
புன்னகை செய்யுங்களேன்.
சக காதுகளும்
சகித்து கொண்டவர்களின்
சரித்திரம் கேட்கட்டும்.

இங்கு
யாரும் நினைத்தை பேச முடியாது..
நீங்கள்
நினைத்தாலும் பேச முடியாது.

நண்பர்களே!
நான் குறை கூறவில்லை.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் பேச முடியாதவர்கள்.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் பேச பட வேண்டியவர்கள்.

----தமிழ்தாசன்----

‎----கல்லா - கடவுள்?-----

பெரியாரின் பெருவிரல் பிடித்து
என் பேனா
சமூகத்தின் இருட்டை வெளுக்க
சவுக்கோடு வருகிறது.

மூடத்தனத்தின் முதுகெலும்பை உடைக்க
பகுத்தறிவு சுத்தியலை
பக்குவமாய் பிடித்து வருகிறது..

ஈரோட்டு கிழவனுக்கே
செவி கொடுக்காதவர்கள்.
என் பாட்டுக்கா
பணிந்துபோவார்கள்.

கொல்லப்படுவோம் என்று தெரிந்தும்
கொசுக்கள் கடிப்பதை நிறுத்துவதில்லை.
அப்படிதான் நானும்.

வாரம் ஒருமுறை கோவிலுக்கு
வந்து வணங்குபவனை
வாழவைப்பவன் இறைவன் என்றால்
வருடம் தோறும் வாசலில் கிடக்கும்
பிச்சைக்காரன் இன்று
பில்கேட்ஸ் ஆகியிருக்கவேண்டுமே?

தாய்ப்பால் இல்லாமல்
என் பச்சை குழந்தைகள்
விடிய விடிய
விரல் சூம்பி
விரதமிருக்க...

இங்கு
வாய் வரைந்து வைத்த சிலைகளுக்கு
வகை வகையை படையல்கள்.

நெல்லுக்கு பாய்ச்ச நீரில்லை
கல்லுக்கு இங்கு பாலாபிசேகம்.

யாகம் வளர்த்தால்
மழை வருமென்று
யார் சொன்னது?
அப்படியென்றால்
சிரப்பூஞ்சி மழைக்கு
சிறப்பு பூஜை செய்யும்
சித்தர்கள் யார்?

தூணிலும் துரும்பிலும்
இறைவன் இருப்பதை
துதிப்பாடுவோரே!

சுவரில் ஆணி அடிக்கிறப் போது
உன் ஆண்டவன் அரையப்படுகிறான் என்று
அறிந்ததில்லையா ?

என் ராணுவ வீரர்கள்
எல்லையில் உயிரை அற்பனித்தபோது.
இங்கு நாம்
காவல் தெய்வங்களுக்கு
கிடா வெட்டி
விழா எடுத்து கொண்டிருந்தோம்.

என்னதான்
மார்பிலே பால் சுரந்து
மக்களை காத்தாலும்
அன்னை என்றுமே
அடுப்படி எடுபிடி.

திடிரென
மரத்திலே பால் வடிந்தால்
மகமாயி மகமாயி.....

ஈமசடங்கு வழியில்லாமல்
ஈக்கள் மொய்க்கும் சடலங்கள்
தெருவில் கிடக்க..
ஈஸ்வரி பொம்மைகள்
பல்லக்கில் பவனி வருகிறதே...

தேன்நிலவுக்கு செல்லாமல்
குழந்தை வரம் கொடுக்கும்
கோயிலுக்கு சென்று என்ன பயன்?

இறைவன் பிறப்பற்றவன் என்று
இன்றுவரை நம்பப்படும் உலகில்
என்னைப்போல்
விந்தணு சேர்க்கையில்
வந்து பிறந்தவன்
எப்படி இறைவன் ஆகா முடியும்.

போதிமரங்கள்
மரக்கதவுகளாய் மாறிவிட்டது.
போலி சாமியார்களின்
எண்ணிக்கை ஏறிவிட்டது.

பக்தர்களைப்போல்
சாமியார்களின் எண்ணிக்கை
சரிசமாகிவிட்டது.

எங்கோ இருக்கும் கோவிலுக்கு
போய்வந்தால்
எல்லாம் கிட்டும் என்பது
உண்மையாயின்
உன் வீட்டு பூஜையறை
சாமிக்கு சக்தி இல்லையா?

செய்வினையால் ஒருவரை
செயலிழக்க வைக்க முடியுமென்றால்
யாரேனும் ஒருவர்
ராஜபக்சேவுக்கு வையுங்கள்.

உன்னை உருவாகியவள்
அன்னை என்றால்..
என் கணக்குப்படி
சிலை தந்த சிற்பி தான்
ஆண்டவனுக்கு அப்பன்.

சிந்தித்துப் பார்....
உண்டியலுக்கும்
திருவோட்டுக்கும்
என்ன வித்தியாசம்?
இதில் நீ யாருக்கு பிச்சை இடுகிறாய்?

உதவும் கரத்தை விட
உயர்ந்த கடவுள்
உலகில் இல்லை.


வீதியில்
கிழிந்த உடையுடன்
விழுந்து கிடக்கும்
அழுக்கு முதியவர்களை
அன்புக்கரம் கொடுத்து
குளிக்க வைத்தால்
ஆயிரம் கும்பாபிசேகம்
நடத்தியதற்கு சமம்.

நீ செய்கிற ரத்த தானத்தை விட
ஒரு புனிதமான தீர்த்தம்
இந்த பூமியில் இல்லை.

ரத்தம் கேட்கும்
எந்த இரட்சகரும்
சாமியே இல்லை.

உன் இறைவனை
உயர்திணையில் சேர்த்த நீ...

அஃறிணைக்கே அருகதையற்ற
கல்லையா கடவுள் என்பது..?

கல்லுக்குள் ஈரமே இல்லை.
இறைவன் எங்கிருப்பான்.

ஐயோ என் இறைவா...

கடவுள் இல்லை என்றா கத்துகிறேன்..

நீ கல் இல்லை என்பதை
இந்த
விபரமற்றோருக்கு எப்படித்தான்
விளக்கப் போகிறேனோ....?

---தமிழ்தாசன்----

எழுத்துப்பிழையாய்....

அன்று நீயும் நானும் கைகோர்த்து நடந்த சாலையில்
இன்று நான் மட்டும் ஒற்றை மரமாய் ....
அன்று நீயும் நானும் கலந்து நின்ற நிலா முற்றத்தில்
இன்று நான் மட்டும் இருளின் உச்சமாய்....
அன்று நீயும் நானும் மலர் கொய்த நந்தவனத்தில்
இன்று நான் மட்டும் உலர்ந்த சருகாய்....
அன்று நீயும் நானும் கல் வீசி களித்த ஆற்றங்கரையில்
இன்று நான் மட்டும் ஒற்றைக்கால் நாரையாய்....
அன்று நீயும் நானும் முகம் பார்த்து ரசித்த கண்ணாடியில்
இன்று நான் மட்டும் உடைந்த சில்லாய்....
அன்று நீயும் நானும் ஆரல் மீன் பிடித்த ஊர் குளத்தில்
இன்று நான் மட்டும் ஆளில்லா தோணியாய்...
அன்று நீயும் நானும் ஒன்றாய் வாசித்த கவிதை நூலில்
இன்று நான் மட்டும் எழுத்துப்பிழையாய் ......

பாரதி

ஆணுக்கு பெண் நிகர் என்றன்
பாரதி! அதனால் தான் அவன் பெயர்
இரு பாலருக்கும் பொறந்துகிறதோ..?

சந்தகை

குழப்பமான இடியாப்பத்திற்கு அழகான பெண்பால் பெயரான 'சந்தகை' யை சூட்டியது ஆணாதிக்கத்தின் நுண்ணரசியல்தான்:-)

மென்மையானவை

மிக மென்மையானவை என் விரல்கள் என்கிறாய்... உன் கரம் பற்றும் குறிக்கோளில் உறுதியாகத்தான் இருக்கின்றன

பிழை

பிழைப்பது மட்டுமல்ல கொஞ்சம் 'பிழை'ப்பதும் சேர்ந்ததே வாழ்க்கை....!

முல்லை

ஒரு நாள் முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி.... தினம் தினம் முல்லைக்கு என் கூந்தலை கொடுக்கறேன் நான் ...

நெரிசல்

நெரிசலான தெருவொன்றை உன் கை பிடித்து கடந்தேன்... கடந்த பின்னும் விடாத உன் கைகளில் நெரிசல் உணர்ந்தேன்!

தேங்காய் எண்ணெய்

குடுவைக்குள் உறைபனி..

யாரடி நீ ?

ஆசை ஆசையாய் பிடிக்க போன பொது பறந்து போன வண்ணத்து பூச்சியோ ?
அறிவியல் புத்தகத்தில் வளர்த்த மயில் இறகோ?
பாட்டி கூறிய கதையில் வரும் தேவதையோ?
வாழை பூக்களின் உறிஞ்சி சுவைத்த ஒரு துளி தேனோ ?
யாரடி நீ ? 

Maths

2 + 2 = Fish
3 + 3 = Eight
7 + 7 = Triangle
8 + 8 = Butterfly