சிவந்த சிப்பிக்குள்
கருப்பு முத்து.
- அவளின் மின்சார விழிகள்.
பார்வைத் தேன் பருகிவிட்டு
பட படக்கிறது பட்டாம்பூச்சி.
-அவளின் மின்மினி இமைகள்.
மீன் விழிகளுக்கு மேலே
மிளகாய்ப் போலே மீசை.
-அவளின் பூங்குயில் நிற புருவங்கள்.
பொட்டு வைப்பதெற்கென
விட்டு வைத்த இடம்.
-அவளின் நெற்றி.
நெற்றியில் நிதம்
நிலா மாற்றி கொள்ளுது நிறம்.
-அவளின் பொம்மை பொட்டு.
முகத்திலே முக்கால்வாசி
மூழ்கிப்போன புல்லாங்குழல்.
-அவளின் முள் முனை மூக்கு.
இதைப் போல் இனி யாரும்
செய்ய முடியாது பணியாரம்.
-அவளின் தின்ன முடியாத கண்ணம்.
தமிழ் குழந்தை தவழ்ந்து பழகும்
தாமரை வீதி.
-அவளின் இசைத் தமிழ் இதழ்கள்.
தாஜ்மஹால் கட்டிய பிறகு
மிச்சமிருந்த பளிங்கு கற்கள்.
- அவளின் முத்து பற்கள்.
யுத்த கள ரத்த உதடுகளில்
சிறிது நேர அமைதி சின்னம்.
- அவளின் பூப்படைந்த புன்னகை.
செந்தமிழ் சவாரி போகும் - ஒரு
செவந்தி குதிரை.
- அவளின் நடனமாடும் நாவு.
கூந்தல் கடல் அலையோரம்
கரை ஒதுங்கிய சங்கு.
-அவளின் செந்தமிழ் சேகரித்த செவிகள்.
கர்வத்தோடு திரியும்
காக்கைகளின் கட்சிக் கொடி.
- அவளின் கருந்தோகை கூந்தல்.
மூங்கில் மரம் ஒன்று
முழுகாமல் இருப்பதுப் போல்.
- அவளின் தொண்டை கழுத்து.
மறைத்து வைக்கப் பட்ட
மலர் குவியல்.
- அவளின் மல்லிகை மார்பு.
மலையின் அடிவாரத்தில்
இடைவிடாத நிலநடுக்கம்.
- அவளின் இன்னிசை இதயத்துடிப்பு.
திகட்டும் அழகில் முதலிடம்
தீராத வறுமை ஒரே ஒரு இடம்.
- அவளின் இல்லாத இடை.
நீலகிரி தோள் நீர்வீழ்ச்சி
ஐந்து நதிகளாய் உருவாச்சு.
- அவளின் கை விரல்கள்.
தேவதைகள் வாழும்
தேசத்து வரைபடம்.
- அவளின் கை ரேகைகள்.
விழி, மூக்கு, வாய்
வரையபடாத முகங்கள்.
- அவளின் நகங்கள்.
பால் ஒளி சிந்தும் பௌர்ணமி இருட்டில்
பண்படுத்தப்பட்ட பாலைவன பகுதி.
- அவளின் பின்புற அழகு.
கம்பன் தோட்டத்தில் இருந்து
காணமல் போன கரும்புகள் இரண்டு.
-அவளின் நந்தவன கால்கள்.
யார் கையும் படாத
வெள்ளை சாதம்.
- அவளின் பிள்ளைப்பாதம்.
பூமிக்கு புளித்து போன
முத்தம்.
- அவளின் பாத சுவடு.
இது
வாலிப வயதில்
காதலன்
காதலியை வர்ணிக்கும்
கவிதை அல்ல.
வார்த்தை உளியால்
சிற்பம் வடித்து.
கற்பனை வலியால்
கர்ப்பம் வெடித்து
வந்த கவிதை.
இது
என்
இனிய தமிழ் அன்னையின்
இளைய பருவம்.
என்
இதய வழியில்
பிரசவித்த உருவம்.
----காதலோடு---
---தமிழ்தாசன்---
கருப்பு முத்து.
- அவளின் மின்சார விழிகள்.
பார்வைத் தேன் பருகிவிட்டு
பட படக்கிறது பட்டாம்பூச்சி.
-அவளின் மின்மினி இமைகள்.
மீன் விழிகளுக்கு மேலே
மிளகாய்ப் போலே மீசை.
-அவளின் பூங்குயில் நிற புருவங்கள்.
பொட்டு வைப்பதெற்கென
விட்டு வைத்த இடம்.
-அவளின் நெற்றி.
நெற்றியில் நிதம்
நிலா மாற்றி கொள்ளுது நிறம்.
-அவளின் பொம்மை பொட்டு.
முகத்திலே முக்கால்வாசி
மூழ்கிப்போன புல்லாங்குழல்.
-அவளின் முள் முனை மூக்கு.
இதைப் போல் இனி யாரும்
செய்ய முடியாது பணியாரம்.
-அவளின் தின்ன முடியாத கண்ணம்.
தமிழ் குழந்தை தவழ்ந்து பழகும்
தாமரை வீதி.
-அவளின் இசைத் தமிழ் இதழ்கள்.
தாஜ்மஹால் கட்டிய பிறகு
மிச்சமிருந்த பளிங்கு கற்கள்.
- அவளின் முத்து பற்கள்.
யுத்த கள ரத்த உதடுகளில்
சிறிது நேர அமைதி சின்னம்.
- அவளின் பூப்படைந்த புன்னகை.
செந்தமிழ் சவாரி போகும் - ஒரு
செவந்தி குதிரை.
- அவளின் நடனமாடும் நாவு.
கூந்தல் கடல் அலையோரம்
கரை ஒதுங்கிய சங்கு.
-அவளின் செந்தமிழ் சேகரித்த செவிகள்.
கர்வத்தோடு திரியும்
காக்கைகளின் கட்சிக் கொடி.
- அவளின் கருந்தோகை கூந்தல்.
மூங்கில் மரம் ஒன்று
முழுகாமல் இருப்பதுப் போல்.
- அவளின் தொண்டை கழுத்து.
மறைத்து வைக்கப் பட்ட
மலர் குவியல்.
- அவளின் மல்லிகை மார்பு.
மலையின் அடிவாரத்தில்
இடைவிடாத நிலநடுக்கம்.
- அவளின் இன்னிசை இதயத்துடிப்பு.
திகட்டும் அழகில் முதலிடம்
தீராத வறுமை ஒரே ஒரு இடம்.
- அவளின் இல்லாத இடை.
நீலகிரி தோள் நீர்வீழ்ச்சி
ஐந்து நதிகளாய் உருவாச்சு.
- அவளின் கை விரல்கள்.
தேவதைகள் வாழும்
தேசத்து வரைபடம்.
- அவளின் கை ரேகைகள்.
விழி, மூக்கு, வாய்
வரையபடாத முகங்கள்.
- அவளின் நகங்கள்.
பால் ஒளி சிந்தும் பௌர்ணமி இருட்டில்
பண்படுத்தப்பட்ட பாலைவன பகுதி.
- அவளின் பின்புற அழகு.
கம்பன் தோட்டத்தில் இருந்து
காணமல் போன கரும்புகள் இரண்டு.
-அவளின் நந்தவன கால்கள்.
யார் கையும் படாத
வெள்ளை சாதம்.
- அவளின் பிள்ளைப்பாதம்.
பூமிக்கு புளித்து போன
முத்தம்.
- அவளின் பாத சுவடு.
இது
வாலிப வயதில்
காதலன்
காதலியை வர்ணிக்கும்
கவிதை அல்ல.
வார்த்தை உளியால்
சிற்பம் வடித்து.
கற்பனை வலியால்
கர்ப்பம் வெடித்து
வந்த கவிதை.
இது
என்
இனிய தமிழ் அன்னையின்
இளைய பருவம்.
என்
இதய வழியில்
பிரசவித்த உருவம்.
----காதலோடு---
---தமிழ்தாசன்---