அன்று நீயும் நானும் கைகோர்த்து நடந்த சாலையில்
இன்று நான் மட்டும் ஒற்றை மரமாய் ....
அன்று நீயும் நானும் கலந்து நின்ற நிலா முற்றத்தில்
இன்று நான் மட்டும் இருளின் உச்சமாய்....
அன்று நீயும் நானும் மலர் கொய்த நந்தவனத்தில்
இன்று நான் மட்டும் உலர்ந்த சருகாய்....
அன்று நீயும் நானும் கல் வீசி களித்த ஆற்றங்கரையில்
இன்று நான் மட்டும் ஒற்றைக்கால் நாரையாய்....
அன்று நீயும் நானும் முகம் பார்த்து ரசித்த கண்ணாடியில்
இன்று நான் மட்டும் உடைந்த சில்லாய்....
அன்று நீயும் நானும் ஆரல் மீன் பிடித்த ஊர் குளத்தில்
இன்று நான் மட்டும் ஆளில்லா தோணியாய்...
அன்று நீயும் நானும் ஒன்றாய் வாசித்த கவிதை நூலில்
இன்று நான் மட்டும் எழுத்துப்பிழையாய் ......
இன்று நான் மட்டும் ஒற்றை மரமாய் ....
அன்று நீயும் நானும் கலந்து நின்ற நிலா முற்றத்தில்
இன்று நான் மட்டும் இருளின் உச்சமாய்....
அன்று நீயும் நானும் மலர் கொய்த நந்தவனத்தில்
இன்று நான் மட்டும் உலர்ந்த சருகாய்....
அன்று நீயும் நானும் கல் வீசி களித்த ஆற்றங்கரையில்
இன்று நான் மட்டும் ஒற்றைக்கால் நாரையாய்....
அன்று நீயும் நானும் முகம் பார்த்து ரசித்த கண்ணாடியில்
இன்று நான் மட்டும் உடைந்த சில்லாய்....
அன்று நீயும் நானும் ஆரல் மீன் பிடித்த ஊர் குளத்தில்
இன்று நான் மட்டும் ஆளில்லா தோணியாய்...
அன்று நீயும் நானும் ஒன்றாய் வாசித்த கவிதை நூலில்
இன்று நான் மட்டும் எழுத்துப்பிழையாய் ......