அச்சம் தவிர்
-உன்னிடமுள்ள பயத்தை நீக்கிவிடு
ஆண்மை தவறேல்
-வீரத்தைக் கைவிடக்கூடாது.
இளைத்தல் இகழ்ச்சி
-மனம் தளர்ச்சியடைதல் தாழ்வைத் தரும்
ஈகை திறன்
-வறியவருக்குக் கொடுப்பதே உயர்ந்த குணமாகும்.
உடலினை உறுதி செய்
-உடலை வலிமையாக்குக.
ஊன் மிக விரும்பு
-உணவை மிகவும் விருப்பத்துடன் உண்க
எண்ணுவது உயர்வு
-உயர்வைத் தருகின்ற எண்ணங்களையே நினைப்பாயாக.
ஏறுபோல் நட
-ஆண் சிங்கத்தை போல் நிமிர்ந்து நடக்க வேண்டும்..
ஐம்பொறி ஆட்சி கொள்
-மெய் வாய் கண் காது மூக்கு ஆகிய ஐந்து உறுப்புகளையும் கட்டுப்படுத்துக.
ஒற்றுமை வலிமையாம்
-ஒற்றுமையாக வாழ்வதே வலிமையை உண்டாக்கும்..
ஓய்தல் ஒழி
-சோம்பலை நீக்கி விடுக.
ஒளடதம் குறை.
-மருந்து உண்பதைக் குறைத்துக் கொள்..
- மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்