பூமியில்
புன்னகை பூக்கள் ஏந்தி வரும்
என் உடன் பிறப்புகளே!
அனைத்து மொழிகளாலும்
கை விடப்பட்ட
அனாதை குழந்தைகளே!
உங்களை ஊமை என்று
உச்சரிக்கும் உதடுகளுக்கு
எச்சரிக்கை எழுதுகிறேன்.
நச்சரிக்கும்
அந்த நாவுகளுக்கு முன்
எச்சிலை துப்புகிறேன்.
அமைதிக்கு பெயர் ஊமை என்றால்
நாம் அடைந்த சுதந்திரம்
ஊமை போராட்டத்தின் உச்சம்தானே!
ஊமை கர்ப்பத்தை
உதைத்து பிறந்தது தானே
உலகின் மொழிகள்..
மௌனத்தோடு மன்றாடித்தானே
ஓசைகளும் பாஷைகளும்
சுற்றும் காற்றில்
சுதந்திரம் பெற்றது.
முதல் மனிதன்
பேசியது
உன் மொழி தானே!
காந்தி கடைபிடித்தது
உன் வழி தானே!
எனக்கு உதடு
முகத்தில் இருக்கிறது..
உங்களுக்கு
உள்ளத்தில் இருக்கிறது...
நான் பேசினால் பிறர் காதில் கேட்க்கும்.
நீங்கள் பேசினால் நிலவில் பூ பூக்கும்.
பேச்சு இழைக்கபடதவர்கள்
குழந்தைகள்.
ஆம்
நீங்கள் சற்று
பெரிய குழந்தைகள்.
காந்தியின் கைத் தறியில்
நெய்தெடுத்த நேசங்களே!
உங்களை
மௌனவாதிகள் என
மரியாதை செலுத்தி
மகாத்மாவின் மைந்தனாகிறேன்.
கோசமிடும் கொச்சை வார்த்தைகள்
ஓசைகளோடு ஒட்டிக் கொள்கிறபோது
உங்கள்
கொலுசொலியின் லயத்தை
கொலுவிருக்க வைத்தவன் மீது
கோபம் வருகிறது.
மொழியை வெளிபடுத்த
விரல்களில்
நாட்டியம் ஆடும்
நளினம் இருப்பதை பார்த்து
உங்களை அப்படியே விட்டுவிடானோ?
இறைவனும் இயற்கையும்
பேசிகொள்கிற
இருதய மொழி மௌனம்.
மனிதன் மட்டுமே
அதில் மாறுபடுகிறேன்.
இயற்கைக்கும் இறைவனுக்கும்
இடையல் இருக்கும்
இருக்கையில்
அமர வேண்டிய
அரசர்கள் நீங்கள்...
ஏன் சிப்பாய்களின் ஊர்வலம்
சிந்தனைக்குள்?
விரலுக்கும்
வீணைக்கும்
விடப்பட்ட இடைவெளி நீங்கள்.
உடைந்த புல்லாங்குழலாய்
உருகுவது ஏன்?
உரையாடுவதற்கும்
விழியன் மொழியே
விருந்தில் அமுதம்.
ஈக்களாய் இருப்பதைவிட
பூக்களாய் இருப்பதே
பெரும் புனிதம்.
உச்சரிக்கும்
உதடுகளுக்கு
உதவி செய்தே..
வார்த்தைகள் வலுவிழந்துவிட்டது.
வடுப்பட்ட வார்த்தைகளுக்கு
மயில் இறகு மருத்துவம்
உங்கள் மனதிற்குள் மட்டும்தான்.
நீங்கள்
சிரித்து கொண்டே
சகித்து கொள்வீர்களாயின்.
சில காதுகள் சுகம் காண
உங்கள்
சிறகுகள் கேட்கும்.
புதுமைகள் படைத்து
புன்னகை செய்யுங்களேன்.
சக காதுகளும்
சகித்து கொண்டவர்களின்
சரித்திரம் கேட்கட்டும்.
இங்கு
யாரும் நினைத்தை பேச முடியாது..
நீங்கள்
நினைத்தாலும் பேச முடியாது.
நண்பர்களே!
நான் குறை கூறவில்லை.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் பேச முடியாதவர்கள்.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் பேச பட வேண்டியவர்கள்.
----தமிழ்தாசன்----
புன்னகை பூக்கள் ஏந்தி வரும்
என் உடன் பிறப்புகளே!
அனைத்து மொழிகளாலும்
கை விடப்பட்ட
அனாதை குழந்தைகளே!
உங்களை ஊமை என்று
உச்சரிக்கும் உதடுகளுக்கு
எச்சரிக்கை எழுதுகிறேன்.
நச்சரிக்கும்
அந்த நாவுகளுக்கு முன்
எச்சிலை துப்புகிறேன்.
அமைதிக்கு பெயர் ஊமை என்றால்
நாம் அடைந்த சுதந்திரம்
ஊமை போராட்டத்தின் உச்சம்தானே!
ஊமை கர்ப்பத்தை
உதைத்து பிறந்தது தானே
உலகின் மொழிகள்..
மௌனத்தோடு மன்றாடித்தானே
ஓசைகளும் பாஷைகளும்
சுற்றும் காற்றில்
சுதந்திரம் பெற்றது.
முதல் மனிதன்
பேசியது
உன் மொழி தானே!
காந்தி கடைபிடித்தது
உன் வழி தானே!
எனக்கு உதடு
முகத்தில் இருக்கிறது..
உங்களுக்கு
உள்ளத்தில் இருக்கிறது...
நான் பேசினால் பிறர் காதில் கேட்க்கும்.
நீங்கள் பேசினால் நிலவில் பூ பூக்கும்.
பேச்சு இழைக்கபடதவர்கள்
குழந்தைகள்.
ஆம்
நீங்கள் சற்று
பெரிய குழந்தைகள்.
காந்தியின் கைத் தறியில்
நெய்தெடுத்த நேசங்களே!
உங்களை
மௌனவாதிகள் என
மரியாதை செலுத்தி
மகாத்மாவின் மைந்தனாகிறேன்.
கோசமிடும் கொச்சை வார்த்தைகள்
ஓசைகளோடு ஒட்டிக் கொள்கிறபோது
உங்கள்
கொலுசொலியின் லயத்தை
கொலுவிருக்க வைத்தவன் மீது
கோபம் வருகிறது.
மொழியை வெளிபடுத்த
விரல்களில்
நாட்டியம் ஆடும்
நளினம் இருப்பதை பார்த்து
உங்களை அப்படியே விட்டுவிடானோ?
இறைவனும் இயற்கையும்
பேசிகொள்கிற
இருதய மொழி மௌனம்.
மனிதன் மட்டுமே
அதில் மாறுபடுகிறேன்.
இயற்கைக்கும் இறைவனுக்கும்
இடையல் இருக்கும்
இருக்கையில்
அமர வேண்டிய
அரசர்கள் நீங்கள்...
ஏன் சிப்பாய்களின் ஊர்வலம்
சிந்தனைக்குள்?
விரலுக்கும்
வீணைக்கும்
விடப்பட்ட இடைவெளி நீங்கள்.
உடைந்த புல்லாங்குழலாய்
உருகுவது ஏன்?
உரையாடுவதற்கும்
விழியன் மொழியே
விருந்தில் அமுதம்.
ஈக்களாய் இருப்பதைவிட
பூக்களாய் இருப்பதே
பெரும் புனிதம்.
உச்சரிக்கும்
உதடுகளுக்கு
உதவி செய்தே..
வார்த்தைகள் வலுவிழந்துவிட்டது.
வடுப்பட்ட வார்த்தைகளுக்கு
மயில் இறகு மருத்துவம்
உங்கள் மனதிற்குள் மட்டும்தான்.
நீங்கள்
சிரித்து கொண்டே
சகித்து கொள்வீர்களாயின்.
சில காதுகள் சுகம் காண
உங்கள்
சிறகுகள் கேட்கும்.
புதுமைகள் படைத்து
புன்னகை செய்யுங்களேன்.
சக காதுகளும்
சகித்து கொண்டவர்களின்
சரித்திரம் கேட்கட்டும்.
இங்கு
யாரும் நினைத்தை பேச முடியாது..
நீங்கள்
நினைத்தாலும் பேச முடியாது.
நண்பர்களே!
நான் குறை கூறவில்லை.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் பேச முடியாதவர்கள்.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் பேச பட வேண்டியவர்கள்.
----தமிழ்தாசன்----