*கல் நெஞ்சம் கொண்டவளே!
தயவு செய்து
உன் தாயிடம் கேட்டுப் பார்.
காதல் வராமல் இருக்க
தவழும் வயதில் உனக்கு
தடுப்பூசி ஏதும் போடப்பட்டதா என்று..
*எப்படியும் ஒரு நாள்
என்னை ஏமாற்றி விடுவாய்
என்று தெரிந்தே
உன்னை காதலித்தேன்.
ஆனால்
என்றாவது ஒருநாள்
என்னை காதலிப்பாய்
என்று நினைத்து நினைத்துதான்
ஏமாந்து போனேன்.
*காதல் ஆயுதம் கொண்டு
பெண்களால் கொலை செய்யப்படும்
ஆண்களின் மரணத்திற்கு பெயர்
தற்கொலை.
*எல்லோருக்கும் வருடத்தில்
ஒரு முறைதான் ஏப்ரல் -1.
எனக்கோ
நீ வருகிறபோதெல்லாம்
ஏப்ரல் -1.
*உன்னால்
அலட்சியமாய் தூக்கி எறியப்பட்ட
மிட்டாய் காகிதங்கள் கூட
என் அலமாரிக்குள்
பத்திரமாய் இருக்கும் போது.
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
என்னையே தூக்கி எரிய?
*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.
*கண்ணீர்- சோகம்- வலி
வேதனை - சாவு.
இப்படி எல்லா
சோக உணர்வுகளையும்
கவிதைகளில் என்னால்
சொல்லிவிட முடிகிறது.
ஆனால்
உன் கணவனோடு கைகோர்த்து
நீ என்னை கடந்து போகையில்
தேம்பி தேம்பி அழும்
இடிந்து போன என் இதயத்தின் குமறலை
விவரித்து சொல்ல முடியவில்லை.
உன்னை மறக்க முடியவில்லை.
*குள்ளநரிகள் குடியிருப்பு பகுதிக்குள்
வராததற்கு ஒரே காரணம்.
நீ அவைகளையும்
ஏமாற்றிவிடுவை என்பதால்தான்.
*கட்டாயம் காதலிக்க வேண்டும் என்பது
ஆண்களுக்கு எழுதப்படாத தலையெழுத்தா?
காதல் என்பதே
தேவதைகளின் தேசிய விளையாட்டா?
*நீ மீன் பிடிக்கவும்
மின்சாரம் எடுக்கவும்
நான் ஒன்றும் தண்ணீர் இல்லையடி.
உன்னால் அழுது அழுது
என் அம்மாவின் இழவுக்கு சிந்த
ஒரு துளி கண்ணீர் இல்லையடி.
தயவு செய்து
உன் தாயிடம் கேட்டுப் பார்.
காதல் வராமல் இருக்க
தவழும் வயதில் உனக்கு
தடுப்பூசி ஏதும் போடப்பட்டதா என்று..
*எப்படியும் ஒரு நாள்
என்னை ஏமாற்றி விடுவாய்
என்று தெரிந்தே
உன்னை காதலித்தேன்.
ஆனால்
என்றாவது ஒருநாள்
என்னை காதலிப்பாய்
என்று நினைத்து நினைத்துதான்
ஏமாந்து போனேன்.
*காதல் ஆயுதம் கொண்டு
பெண்களால் கொலை செய்யப்படும்
ஆண்களின் மரணத்திற்கு பெயர்
தற்கொலை.
*எல்லோருக்கும் வருடத்தில்
ஒரு முறைதான் ஏப்ரல் -1.
எனக்கோ
நீ வருகிறபோதெல்லாம்
ஏப்ரல் -1.
*உன்னால்
அலட்சியமாய் தூக்கி எறியப்பட்ட
மிட்டாய் காகிதங்கள் கூட
என் அலமாரிக்குள்
பத்திரமாய் இருக்கும் போது.
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
என்னையே தூக்கி எரிய?
*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.
*கண்ணீர்- சோகம்- வலி
வேதனை - சாவு.
இப்படி எல்லா
சோக உணர்வுகளையும்
கவிதைகளில் என்னால்
சொல்லிவிட முடிகிறது.
ஆனால்
உன் கணவனோடு கைகோர்த்து
நீ என்னை கடந்து போகையில்
தேம்பி தேம்பி அழும்
இடிந்து போன என் இதயத்தின் குமறலை
விவரித்து சொல்ல முடியவில்லை.
உன்னை மறக்க முடியவில்லை.
*குள்ளநரிகள் குடியிருப்பு பகுதிக்குள்
வராததற்கு ஒரே காரணம்.
நீ அவைகளையும்
ஏமாற்றிவிடுவை என்பதால்தான்.
*கட்டாயம் காதலிக்க வேண்டும் என்பது
ஆண்களுக்கு எழுதப்படாத தலையெழுத்தா?
காதல் என்பதே
தேவதைகளின் தேசிய விளையாட்டா?
*நீ மீன் பிடிக்கவும்
மின்சாரம் எடுக்கவும்
நான் ஒன்றும் தண்ணீர் இல்லையடி.
உன்னால் அழுது அழுது
என் அம்மாவின் இழவுக்கு சிந்த
ஒரு துளி கண்ணீர் இல்லையடி.
----தமிழ்தாசன்--