பெரியாரின் பெருவிரல் பிடித்து
என் பேனா
சமூகத்தின் இருட்டை வெளுக்க
சவுக்கோடு வருகிறது.
மூடத்தனத்தின் முதுகெலும்பை உடைக்க
பகுத்தறிவு சுத்தியலை
பக்குவமாய் பிடித்து வருகிறது..
ஈரோட்டு கிழவனுக்கே
செவி கொடுக்காதவர்கள்.
என் பாட்டுக்கா
பணிந்துபோவார்கள்.
கொல்லப்படுவோம் என்று தெரிந்தும்
கொசுக்கள் கடிப்பதை நிறுத்துவதில்லை.
அப்படிதான் நானும்.
வாரம் ஒருமுறை கோவிலுக்கு
வந்து வணங்குபவனை
வாழவைப்பவன் இறைவன் என்றால்
வருடம் தோறும் வாசலில் கிடக்கும்
பிச்சைக்காரன் இன்று
பில்கேட்ஸ் ஆகியிருக்கவேண்டுமே?
தாய்ப்பால் இல்லாமல்
என் பச்சை குழந்தைகள்
விடிய விடிய
விரல் சூம்பி
விரதமிருக்க...
இங்கு
வாய் வரைந்து வைத்த சிலைகளுக்கு
வகை வகையை படையல்கள்.
நெல்லுக்கு பாய்ச்ச நீரில்லை
கல்லுக்கு இங்கு பாலாபிசேகம்.
யாகம் வளர்த்தால்
மழை வருமென்று
யார் சொன்னது?
அப்படியென்றால்
சிரப்பூஞ்சி மழைக்கு
சிறப்பு பூஜை செய்யும்
சித்தர்கள் யார்?
தூணிலும் துரும்பிலும்
இறைவன் இருப்பதை
துதிப்பாடுவோரே!
சுவரில் ஆணி அடிக்கிறப் போது
உன் ஆண்டவன் அரையப்படுகிறான் என்று
அறிந்ததில்லையா ?
என் ராணுவ வீரர்கள்
எல்லையில் உயிரை அற்பனித்தபோது.
இங்கு நாம்
காவல் தெய்வங்களுக்கு
கிடா வெட்டி
விழா எடுத்து கொண்டிருந்தோம்.
என்னதான்
மார்பிலே பால் சுரந்து
மக்களை காத்தாலும்
அன்னை என்றுமே
அடுப்படி எடுபிடி.
திடிரென
மரத்திலே பால் வடிந்தால்
மகமாயி மகமாயி.....
ஈமசடங்கு வழியில்லாமல்
ஈக்கள் மொய்க்கும் சடலங்கள்
தெருவில் கிடக்க..
ஈஸ்வரி பொம்மைகள்
பல்லக்கில் பவனி வருகிறதே...
தேன்நிலவுக்கு செல்லாமல்
குழந்தை வரம் கொடுக்கும்
கோயிலுக்கு சென்று என்ன பயன்?
இறைவன் பிறப்பற்றவன் என்று
இன்றுவரை நம்பப்படும் உலகில்
என்னைப்போல்
விந்தணு சேர்க்கையில்
வந்து பிறந்தவன்
எப்படி இறைவன் ஆகா முடியும்.
போதிமரங்கள்
மரக்கதவுகளாய் மாறிவிட்டது.
போலி சாமியார்களின்
எண்ணிக்கை ஏறிவிட்டது.
பக்தர்களைப்போல்
சாமியார்களின் எண்ணிக்கை
சரிசமாகிவிட்டது.
எங்கோ இருக்கும் கோவிலுக்கு
போய்வந்தால்
எல்லாம் கிட்டும் என்பது
உண்மையாயின்
உன் வீட்டு பூஜையறை
சாமிக்கு சக்தி இல்லையா?
செய்வினையால் ஒருவரை
செயலிழக்க வைக்க முடியுமென்றால்
யாரேனும் ஒருவர்
ராஜபக்சேவுக்கு வையுங்கள்.
உன்னை உருவாகியவள்
அன்னை என்றால்..
என் கணக்குப்படி
சிலை தந்த சிற்பி தான்
ஆண்டவனுக்கு அப்பன்.
சிந்தித்துப் பார்....
உண்டியலுக்கும்
திருவோட்டுக்கும்
என்ன வித்தியாசம்?
இதில் நீ யாருக்கு பிச்சை இடுகிறாய்?
உதவும் கரத்தை விட
உயர்ந்த கடவுள்
உலகில் இல்லை.
வீதியில்
கிழிந்த உடையுடன்
விழுந்து கிடக்கும்
அழுக்கு முதியவர்களை
அன்புக்கரம் கொடுத்து
குளிக்க வைத்தால்
ஆயிரம் கும்பாபிசேகம்
நடத்தியதற்கு சமம்.
நீ செய்கிற ரத்த தானத்தை விட
ஒரு புனிதமான தீர்த்தம்
இந்த பூமியில் இல்லை.
ரத்தம் கேட்கும்
எந்த இரட்சகரும்
சாமியே இல்லை.
உன் இறைவனை
உயர்திணையில் சேர்த்த நீ...
அஃறிணைக்கே அருகதையற்ற
கல்லையா கடவுள் என்பது..?
கல்லுக்குள் ஈரமே இல்லை.
இறைவன் எங்கிருப்பான்.
ஐயோ என் இறைவா...
கடவுள் இல்லை என்றா கத்துகிறேன்..
நீ கல் இல்லை என்பதை
இந்த
விபரமற்றோருக்கு எப்படித்தான்
விளக்கப் போகிறேனோ....?
---தமிழ்தாசன்----
என் பேனா
சமூகத்தின் இருட்டை வெளுக்க
சவுக்கோடு வருகிறது.
மூடத்தனத்தின் முதுகெலும்பை உடைக்க
பகுத்தறிவு சுத்தியலை
பக்குவமாய் பிடித்து வருகிறது..
ஈரோட்டு கிழவனுக்கே
செவி கொடுக்காதவர்கள்.
என் பாட்டுக்கா
பணிந்துபோவார்கள்.
கொல்லப்படுவோம் என்று தெரிந்தும்
கொசுக்கள் கடிப்பதை நிறுத்துவதில்லை.
அப்படிதான் நானும்.
வாரம் ஒருமுறை கோவிலுக்கு
வந்து வணங்குபவனை
வாழவைப்பவன் இறைவன் என்றால்
வருடம் தோறும் வாசலில் கிடக்கும்
பிச்சைக்காரன் இன்று
பில்கேட்ஸ் ஆகியிருக்கவேண்டுமே?
தாய்ப்பால் இல்லாமல்
என் பச்சை குழந்தைகள்
விடிய விடிய
விரல் சூம்பி
விரதமிருக்க...
இங்கு
வாய் வரைந்து வைத்த சிலைகளுக்கு
வகை வகையை படையல்கள்.
நெல்லுக்கு பாய்ச்ச நீரில்லை
கல்லுக்கு இங்கு பாலாபிசேகம்.
யாகம் வளர்த்தால்
மழை வருமென்று
யார் சொன்னது?
அப்படியென்றால்
சிரப்பூஞ்சி மழைக்கு
சிறப்பு பூஜை செய்யும்
சித்தர்கள் யார்?
தூணிலும் துரும்பிலும்
இறைவன் இருப்பதை
துதிப்பாடுவோரே!
சுவரில் ஆணி அடிக்கிறப் போது
உன் ஆண்டவன் அரையப்படுகிறான் என்று
அறிந்ததில்லையா ?
என் ராணுவ வீரர்கள்
எல்லையில் உயிரை அற்பனித்தபோது.
இங்கு நாம்
காவல் தெய்வங்களுக்கு
கிடா வெட்டி
விழா எடுத்து கொண்டிருந்தோம்.
என்னதான்
மார்பிலே பால் சுரந்து
மக்களை காத்தாலும்
அன்னை என்றுமே
அடுப்படி எடுபிடி.
திடிரென
மரத்திலே பால் வடிந்தால்
மகமாயி மகமாயி.....
ஈமசடங்கு வழியில்லாமல்
ஈக்கள் மொய்க்கும் சடலங்கள்
தெருவில் கிடக்க..
ஈஸ்வரி பொம்மைகள்
பல்லக்கில் பவனி வருகிறதே...
தேன்நிலவுக்கு செல்லாமல்
குழந்தை வரம் கொடுக்கும்
கோயிலுக்கு சென்று என்ன பயன்?
இறைவன் பிறப்பற்றவன் என்று
இன்றுவரை நம்பப்படும் உலகில்
என்னைப்போல்
விந்தணு சேர்க்கையில்
வந்து பிறந்தவன்
எப்படி இறைவன் ஆகா முடியும்.
போதிமரங்கள்
மரக்கதவுகளாய் மாறிவிட்டது.
போலி சாமியார்களின்
எண்ணிக்கை ஏறிவிட்டது.
பக்தர்களைப்போல்
சாமியார்களின் எண்ணிக்கை
சரிசமாகிவிட்டது.
எங்கோ இருக்கும் கோவிலுக்கு
போய்வந்தால்
எல்லாம் கிட்டும் என்பது
உண்மையாயின்
உன் வீட்டு பூஜையறை
சாமிக்கு சக்தி இல்லையா?
செய்வினையால் ஒருவரை
செயலிழக்க வைக்க முடியுமென்றால்
யாரேனும் ஒருவர்
ராஜபக்சேவுக்கு வையுங்கள்.
உன்னை உருவாகியவள்
அன்னை என்றால்..
என் கணக்குப்படி
சிலை தந்த சிற்பி தான்
ஆண்டவனுக்கு அப்பன்.
சிந்தித்துப் பார்....
உண்டியலுக்கும்
திருவோட்டுக்கும்
என்ன வித்தியாசம்?
இதில் நீ யாருக்கு பிச்சை இடுகிறாய்?
உதவும் கரத்தை விட
உயர்ந்த கடவுள்
உலகில் இல்லை.
வீதியில்
கிழிந்த உடையுடன்
விழுந்து கிடக்கும்
அழுக்கு முதியவர்களை
அன்புக்கரம் கொடுத்து
குளிக்க வைத்தால்
ஆயிரம் கும்பாபிசேகம்
நடத்தியதற்கு சமம்.
நீ செய்கிற ரத்த தானத்தை விட
ஒரு புனிதமான தீர்த்தம்
இந்த பூமியில் இல்லை.
ரத்தம் கேட்கும்
எந்த இரட்சகரும்
சாமியே இல்லை.
உன் இறைவனை
உயர்திணையில் சேர்த்த நீ...
அஃறிணைக்கே அருகதையற்ற
கல்லையா கடவுள் என்பது..?
கல்லுக்குள் ஈரமே இல்லை.
இறைவன் எங்கிருப்பான்.
ஐயோ என் இறைவா...
கடவுள் இல்லை என்றா கத்துகிறேன்..
நீ கல் இல்லை என்பதை
இந்த
விபரமற்றோருக்கு எப்படித்தான்
விளக்கப் போகிறேனோ....?
---தமிழ்தாசன்----